அமைச்சர் டாக்டர் மணிகண்டன் இராமநாதபுரம் மக்களவை தொகுதி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்
தமிழக தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அமைந்த அண்ணா அரசு தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் ஜனநாயக கடைமையான வாக்குரிமையை செய்திடும் வகையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
கொட்டகை ஸ்ரீகருப்பண்ணசாமி அருள்வாக்கு பவுர்ணமி தினத்தில் திரண்ட பக்தர்கள்
ராமநாதபுரம், மே 19-
ராமநாதபுரம் கொட்டகை ஸ்ரீ பதினாறு பிள்ளை ஸ்ரீ கருப்பண்ண சாமி கோயில் பூசாரி அருள்வாக்கு சிவா பவுர்ணமி தினத்தில் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
ராமநாதபுரம் கொட்டகை ஸ்ரீ பதினாறு பிள்ளை ஸ்ரீ கருப்பண்ணசாமி கோயிலில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்தில் பக்தர்களுக்கு கோயில் பூசாரி...
ராமநாதபுரம் அருகே ஆட்டோ டிரைவர் ரெயில் மோதி பலி?- போலீசார் விசாரணை
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள சக்கரைக்கோட்டையைச் சேர்ந்தவர் ராம். இவரது மகன் குணசேகரன் (வயது22). இவர் வாடகை ஆட்டோ ஓட்டிவந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வீட்டின் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் குணசேகரன் உடல் சிதறிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே...
இராமநாதபுரம் நஜியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 11வது அறிவியல் கண்காட்சி முகாம்
ராமநாதபுரம் அருகே அழகன்குளம் பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான 11வது அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மண்டபம் ஒன்றியம் அழகன்குளம் பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறன், புதிய கண்டுபிடிப்புகள், புத்தாக்கத்தை உருவாக்கும் வகையில் பள்ளிகளுக்கு இடையேயான 11வது அறிவியல் கண்காட்சி...
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உலகத் தாய்மொழி நாள் விழா
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா கொண்டாடப் பெற்றது.
இவ் விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும் செய்யது அம்மாள் அறக்கட்டளையின் உறுப்பினருமான ராஜாத்தி அப்துல்லா...
இராமநாதபுரம்; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கான ஊட்டச்சத்து பிரச்சார வாகனத்தை கொடியசைத்து மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பாக ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப் படுவதை முன்னிட்டு நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பணிகளை மேற் கொள்வதற்கான பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் உடன் மாவட்ட ஒருங்கிணைந்த...
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகத்தை சத்தமின்றி தீர்க்கும் ரஜினி மக்கள் மன்றத்தினர் – மனதாரப் பாராட்டும் கிராம மக்கள்
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க ரஜினி மக்கள் மன்றம் மாவட்டம் முழுவதும் இலவச குடிநீர் வழங்கி மக்களின் அமோக பாராட்டுகளை பெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. அதிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீருக்காக மக்கள் அலைமோதும் நிலை உருவாகியுள்ளது....
ராமநாதபுரம் தொகுதி தமிழகத்தின் முன்மாதிரி தொகுதி காமராஜர் அறக்கட்டளை கட்டட திறப்பு விழாவில் -அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பெருமிதம்
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் சட்டசபை தொகுதி தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக இருப்பதற்காக மக்களின் தேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருவதில் தனி கவனம் செலுத்தி வருகிறேன், என, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம் இரட்டையூரணி கிராமத்தில் கல்வி தந்தை காமராஜர் அறக்கட்டளை...
ராமநாதபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் மன்றத்தின் சார்பில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அரண்மனையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்றம் சார்பில் காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் உதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்றத்தின் சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். பின்...
வீட்டு உபகரணங்களை கைப்பேசி செயலி மூலம் கட்டுப்படுத்தும் முறை சென்னையில் அறிமுகம்
தமிழக சட்டபேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அறிவிப்பு
ராமநாதபுரம், ஜூலை 12-
பொதுமக்கள் தங்கள் வீட்டு உபகரணங்களை கைப்பேசியில் உள்ள செயலி வாயிலாக எந்நேரமும் எவ்விடத்திலிருந்தும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்துடன் ஒரு செயலி மூலமாக கட்டுப்படுத்த முடியும். முதல்கட்டமாக இந்த தொழில்நுட்பம் சென்னை நகரத்தில்...














