திருவள்ளூரில் பார்க்கிங்க் வசதியில்லாத தனியார் உணவகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்பட்ட விபத்து … 4...
திருவள்ளூர், ஜன. 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் சீனிவாசன் …
திருவள்ளூரில் திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் உணவகத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களால் அப்பகுதியில் வேகமாக வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் 4 நபர்களுக்கு கால் மற்றும் உடல்களில் படுகாயம் ஏற்பட்டது....
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா …
காஞ்சிபுரம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக மகா கும்பாபிஷேக நிறைவு விழா நடைப்பெற்றது. தொடர்ந்து 1008 சங்குகளில் புனித நீர் வைத்து சிறப்பு பூஜை செய்து கச்சபேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில்...
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைப்பெற்ற மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சி ..
கும்பகோணம், ஆக. 18 -
கும்பகோணத்தில் கோகுலாஷ்டமி (எ) ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்து அசத்தினர். மேலும், ஆடல் பாடலுடன் பலவிதமான கலை நிகழ்ச்சிகளும், நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்தமான பலவிதமான லட்டு, முறுக்கு, அதிரசம், சீடை,...
சக்காரப்பள்ளி சப்தஸ்தான விழாவில் நடைப்பெற்ற சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி …
தஞ்சாவூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேவுள்ள சக்கராப்பள்ளி சப்தஸ்தான விழாவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டை அருகே சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில் சப்தஸ்தான விழாவில் முன்தினம் அதிகாலை அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் தேவநாயகி அம்பாள்...
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி பயிலும் 588 மாணவிகளுக்கு...
திருவாரூர், செப். 05 -
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதிதிட்டத்தின் கீழ் “புதுமைப் பெண் திட்டம்” மூலம் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 588 கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான பற்று அட்டை, (ஏடிஎம் அட்டை), உயர்கல்வி வழிகாட்டு கையேடு...
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற உலக பழங்குடியினர் தினவிழா நிகழ்ச்சியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்..
திருவண்ணாமலை ஆக.12-
திருவண்ணாமலையில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற உலக பழங்குடியினர் தினவிழாவை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று தொடங்கிவைத்தார்.
திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆகஸ்டு 11 பழங்குடியினர் தினவிழா...
பழவேற்காட்டில் நடைப்பெற்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி ..
பழவேற்காடு, செப். 05 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியம், பழவேற்காடு பகுதியில் இன்று பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாஜகவின் மாவட்ட தலைவர் வி.சரவணன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
முன்னதாக அறிமுக கூட்டம் நடைப்பெற்றது. அதில் பாஜகவின்...
சிபிஐ வைத்து விசாரணை நடத்தட்டும்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி காட்டமான...
ராசிபுரம், ஏப். 23 -
ராசிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பி. தங்கமணியிடம் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் தன்வசம் உள்ள மத்திய அரசின் சிபிஐ வைத்து விசாரணை நடத்தட்டும் என காட்டமாக பதிலளித்தார். மேலும், மின்...
காவல்துறை மற்றும் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் நாச்சியார்கோவில் பகுதியில் நடைப்பெற்ற தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணி ..
நாச்சியார்கோவில், மார்ச். 01 -
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் காவல்துறையின் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் அப்பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில்...
வெளிநாட்டு அஞ்சலகப் பார்சலில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா … சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி நடவடிக்கை...
சென்னை, மார்ச். 11 -
சென்னையில் உள்ள வெளிநாட்டு அஞ்சலக பார்சலில் 32 போதை மாத்திரைகள் மற்றும் 419 கிராம் கஞ்சாவை நேற்று சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.
நெதர்லாந்தில் இருந்து விஜயவாடா மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த நபர்களின் முகவரியிட்ட இரண்டு பார்சல்களை சந்தேகத்தின்...
























