ஆவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இரயில் மறியல் போராட்டம்; ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதைக் கண்டித்து
ஆவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஜம்மு- காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நீக்கியதைக் கண்டித்து இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
https://youtu.be/NSWUyGBPfIs
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...
ஆவடி மாநகராட்சி முன்பு உள்ளாட்சி ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆவடி மாநகராட்சி அலுவலகம் வாயலில் எ.ஐ.டி.யூ.சி சார்பில் உள்ளாட்சி ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஆவடி கிளைத் தலைவர் கோபி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 2016 ஆம் ஆண்டு சம்பள கமிஷன் ஏழாவது ஊதியக்குழு நிலுவையில் உள்ள தொகையை...
ஆவடி வாகன விபத்துக்களை தடுத்திட, பள்ளி மாணவர்கள் முன் வரவேண்டும். அம்பத்தூர் போக்குவரத்து உதவி ஆணையர் வேண்டுகோள்
இந்திய அளவில் வாகன விபத்து ஏற்படுவதில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்றிட நாளைய தலைமுறைகளான பள்ளி மாணவர்கள் முன் வர வேண்டும் என அம்பத்தூர் போக்குவரத்து உதவி ஆணையர் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை அடுத்த ஆவடியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து...
ராமநாதபுரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி எஸ்.பி., ஓம்பிரகாஷ்...
ராமநாதபுரம், ஆக.10-ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ராமநாதபுரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா தலைமை வகித்து கொடிசையத்து துவக்கி வைத்தார்.
ராமநாதபுரத்தில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள்...
ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் புனரமைப்பு பணிகள் -மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடி ஆய்வு
ராமநாதபுரம், ஆக. 10- ராமாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனந்துார், ஆய்ங்குடி, ஓடக்கரை மற்றும் காத்தனுார் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்கம் பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரடியாக சென்று...
ராமநாதபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் 530 மரக்கன்றுகள் நடும் விழா – டி.ஐ.ஜி., ரூபேஷ்குமார்மீனா துவக்கி வைப்பு
ராமநாதபுரம், ஆக. 10- ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் 280 மரக்கன்றுகளும், ஆயுதப்படையில் 150 மரக்கன்றுகளும், கமுதி தனி ஆயுதப்படையில் 10 மரக்கன்றுகளும் என மொத்தம் 530 மரக்கன்றுகள் நடும்பணியை டிஐஜி ருபேஷ்குமார் மீணா தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனைத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை...
ராமநாதபுரம் பெரியபட்டினத்தில் சந்தனக்கூடு விழா கொடியேற்றம்
பெரியபட்டினம், ஆக. 10- ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. 118ம் ஆண்டு மதநல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்றம் நேற்று மாலை நடந்தது.
ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து, மாலை 4:30 மணிக்கு தொடங்கி மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் பெரியபட்டினம் வீதிகளின்...
ராமநாதபுரம் ஜெருசலம் புனித பயணத்திற்கு நிதி உதவி வழங்கும் திட்டம், கிறித்தவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அழைப்பு
ராமநாதபுரம், ஆக.10-
தமிழ்நாட்டை சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற் கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்குவதற்கான திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் கிறித்தவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
இத்திட்டத்தில் அனைத்து பிரிவினரின் கீழ் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள்...
தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவ மாணவியரை முன்னாள் மாணவர்கள் – பூங்கொத்து மற்றும் ஸ்டெதஸ்கோப்...
மருத்துவ படிப்பு பயில வரும் மாணவர்கள் பெற்றோர்கள் நெகிழ்ச்சி
தேனி மாவட்டம் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ.மாணவியர்களுக்கு வகுப்பு தொடங்குவதற்கு முன்னால் மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்ட ஆலோசனை மற்றும் அறிவுரை கூட்டம் முதல்வர் ராஜேந்திரன் தலைமையிலும், திருச்சிற்றான் முன்னிலையிலும்...
ஆடி அமாவாசையை முன்னிட்டு மாவூற்று வேலப்பர் கோவிலில் குடும்பத்துடன் குவிந்த பக்தர்கள் கூட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தொப்பம்பட்டி உள்ள ஸ்ரீ மாவூற்று வேலப்பர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முருகனுக்கு இளநீர், சந்தன பன்னீர் ,தேன் அபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதிகாலை முதற் கொண்டு பக்தர்கள் நூற்றுக்கணக்கில் கூட்டம் கூட்டமாக...














