ராமநாதபுரம், ஆக.10-
தமிழ்நாட்டை சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற் கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்குவதற்கான திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் கிறித்தவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
இத்திட்டத்தில் அனைத்து பிரிவினரின் கீழ் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் இதில் 50 கன்னியாஸ்திரிகள் அருட் சகோதரிகள் புனித பயணம் மேற் கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது, என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டை சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலேம் புனி பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறத்துவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம் அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரை மேற் கொள்ள உத்தேசிக்கப் பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்களள் வரை இருக்கும்.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள், மற்றும் விண்ணப்படிவம் ஆகியன www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் காணலாம். விண்ணப்ப படிவங்களை படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனைத்தும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறித்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவி கோரும் விண்ணப்பம் 2019 என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மகால், பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 30க்கும் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்கள் பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்ர நல அலுவலர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திகுறிப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.