ராமநாதபுரம், ஆக. 10– ராமாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனந்துார், ஆய்ங்குடி, ஓடக்கரை மற்றும் காத்தனுார் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்கம் பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
தமிழக முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக கீழ்வைகை வடிநில கோட்டம், பரமக்குடியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 41 கண்மாய்களிலும் குண்டாறு வடிநில கோட்டம் மதுரையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 28 கண்மாய்களிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்தவகையில் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனந்துார் கிராமத்திலு்ள கண்மாயில் ரூ.69 லட்சம் மதிப்பிலும், ஆய்ங்குடி கிரமத்திலுள்ள கண்மாயில் ரூ.65.75 லட்சம் மதிப்பிலும், ஒடக்கரை கிராமத்திலுள்ள கண்மாயில் ரூ.45 லட்சம் மதிப்பிலும், சாத்தனுார் கிராமத்திலுள்ள கண்மாயில் ரூ.57 லட்சம் மதிப்பிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளானது சம்பந்தப்பட்ட கண்மாய்களின் விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, மேற்குறிப்பிட்டுளள கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரிடையாக சென்று குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ததோடு, விவசாய பாசனதாரர் சங்க பிரதி நிதிகளுக்கு அறிவுரை வழங்கினார். குறிப்பாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் முழு வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்திட வேண்டும். அதேபோல் கண்மாய் புனரமைப்பு பணிகளை விரைவாகவும், தரமாகவும் நிறை வேற்றிட வேண்டும். கண்மாய் கரையினை பலப்படுத்தி கரை யோரங்களில் அதிக அளவில் பலன் தரும் மரக் கன்றுகளை நடவு செய்திட வேண்டும்.
இது தவிர கண்மாய்களின் கரைகளை பலப்படுத்துதல், நீர்பிடிப்பு பகுதிகளை தூர் வாருதல், நீர் வரத்துக் கால்வாய்களை சீரமைத்தல், மடைகள் மற்றும் கலுங்குகளை தேவைக் கேற்ப சீரமைத்தல் புதிதாக கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற் கொள்ளப் படுகின்றன. இப்புனரமைப்பு பணிகளானது சம்பந்தப்பட்ட கண்மாய்களின் ஆயக்கட்டுத் தாரர்களை ஒருங்கிணைத்து வெளிப்படையாக விவசாய பாசனதார சங்கம் நிர்வாக குழு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் 90 சதவீதம் அரசின் பங்களிப்பு தொகையுடனும், 10 சதவீத சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர் நல சங்கத்தின் பங்களிப்புடனும் மேற் கொள்ளப் படுகின்றன. இப்பணிகள் மேற்கொள்ளும் விவசாய நலச்சங்க பிரதி நிதிகளுக்கு குடிமராமத்து திட்டப் பணிகள் குறித்து பயிற்சி அளித்திட நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது.
மேலும், குடிமராமத்து மேற் கொள்ளும் அனைத்து கண் மாய்களிலும் வருவாய்த் துறை அலுவலர்கள் நில அளவீடு செய்து கண்மாயின் எல்லையினை குறியீடு செய்திடவும், ஆக்கிரமிப்புகளை பொதுப் பணித்துறை அலுவலர் களோடு ஒருங்கிணைந்து பாரபட்ச மின்றி அகற்றிடவும் உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும் இக்குடிமராமத்து பணியினை சிறப்பாக செயல் படுத்தி ஆயக் கட்டுத்தாரர் நலச் சங்கத்தினை ஊக்கு விக்கும் வகையில் முதல் மூன்று கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2ம் மற்றும் 3ம் பரிசாக தலா ரூ. 5 லட்சமும் வழங்க திட்டமிடப் பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் வெங்கிட கிருஷ்ணன், உதவி செயற் பொறியாளர் பாபு, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், விவசாய பாசனதாரர்கள் சங்க உறுப்பினர்கள், பொது மக்கள் உடனிருந்தனர்.