உலக கோப்பை போட்டியில் 4-வது வரிசையில் ஆட தயார்-வீராட்கோலி சொல்கிறார்
ஐதராபாத்:
ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஐதராபாத்தில் இன்று நடக்கிறது....
இரானி கோப்பை கிரிக்கெட்: கார்னிவர் சதத்தால் விதர்பா 425 ரன்கள் குவிப்பு
ரெஸ்ட் ஆப் இந்தியா - விதர்பா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா 330 ரன்கள் சேர்த்தது. பின்னர் விதர்பா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட...
அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே என்னுடைய இலக்கு: முகமது ஷமி
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடி வந்த இவர் ஆஸ்திரேலியா தொடரின்போது ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நியூசிலாந்து ஒருநாள் போட்டியில் இடம் பிடித்தார். அந்த தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்றார் ஷமி.
இதனால் உலகக்கோப்பைக்கான...
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியில் அந்த்ரே ரஸல்
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றி பெற்றன.
இந்த தொடரில் முதல் மூன்று போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிதான் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கடைசி இரண்டு போட்டிக்கான...
உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி இன்று முடிவு: கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு ஆலோசனை
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருகிற மே மாதம் தொடங்கும்...
ரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக இறக்க வேண்டும்-வார்னே யோசனை
புதுடெல்லி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் டோனி, ரிஷப் பந்த் இருவரும் விளையாட வேண்டும். ரிஷப் பந்த், அற்புதமான வீரர். ஒரு பேட்ஸ்மேனாக அவர் ஏன் தொடரக்கூடாது? என்னைக்கேட்டால் அவரை...
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெளியேற்ற வேண்டும்-இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர்
புதுடெல்லி:
சமீபத்தில், காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சையும் கொதிக்க வைத்துள்ளது. பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த நாட்டுடன் கிரிக்கெட் உறவை துண்டிக்க வேண்டும் என்ற...
சர்வதேச டென்னிசில் 100-வது பட்டத்தை வென்றார் பெடரர்
துபாய்:
ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வந்தது. இதில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 11-ம் நிலை வீரரான ஸ்டெபானோஸ் சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த மோதலில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமான பெடரர்...
டெஸ்ட் தரவரிசை: தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திற்கு சரிவு-முதன்முறையாக 2-வது இடத்தில் நியூசிலாந்து
தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் இலங்கை இரண்டு டெஸ்டிலும் வெற்றிபெற்று தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது.
இதனால் 2-வது இடத்தில் இருந்து தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திற்கு சரிந்தது. 3-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து 2-வது இடத்திற்கு முன்னேறியது....
முதல் டி20 போட்டி-டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை...



















