முதல் டி20 போட்டி-டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை...
ஆஸ்திரேலியா தொடர்-இந்திய அணி நாளை தேர்வு
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இந்த சுற்றுப்பயணம் வெற்றி கரமாக அமைந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. 20 ஓவர்...
உலககோப்பையில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஐ.பி.எல்.லில் ஓய்வு அளிக்கப்படுமா? பிசிசிஐ பதில்
புதுடெல்லி:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
12-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந்தேதி வரை போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எஞ்சிய போட்டி அட்டவணை வெளியிடப்படும்.
ஐ.பி.எல். போட்டி முடிந்த...
24 சிக்சர் அடித்து ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து உலக சாதனை
செயின்ட் ஜார்ஜ்:
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்தின் சிறந்த ஸ்கோர் இதுவாகும்....
புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்கள் குடும்பங்களுக்கு முகமது ஷமி ரூ. 5 லட்சம் நிதியுதவி
சிஆர்பிஎஃப் வீரர்கள் கடந்த 14-ந்தேதி ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் வாகனத்தில் அணிவகுத்து செல்லும்போது பயங்கரவாதி சொகுசு காரில் வெடிபொருட்களை நிரப்பி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
வீரர்களின் சொந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசு, அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்துள்ளது. மேலும், விளையாட்டு வீரர்கள், சினிமா...
சென்னை ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ஹீரோ ஆசியன் சாம்பியன்ஸ் – 2023 போட்டியினை முன்னிட்டு நடைப்பெறும் புனரமைப்புப்...
சென்னை, ஜூன். 25 –
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்று வரும் புனரமைப்பு பணிகளை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இம் மைதானத்தில் எதிர் வரும் ஆகஸ்ட் 03 முதல்...
கும்மிடிப்பூண்டி : கண்ணாடிப் பேழைக்குள் பத்து நிமிடங்கள் முகசகுனி கபடாசனத்தை செய்து 9 வயது தனியார் பள்ளி மாணவி...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 19 -
கும்மிடிப்பூண்டியில், 9 வயது பள்ளிச்சிறுமி யோகாசனங்களில் மிகவும் கடினமான அந்தர் முகசகுனி கபடாசனத்தை பத்து நிமிடங்கள் தொடர்ந்து கண்ணாடிப் பெட்டிக்குள் செய்து தனியார் பள்ளி மாணவி நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மணிகண்டன்...
32 வழக்கறிஞர்கள் அணி பங்கேற்று ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி …
ஊத்துக்கோட்டை, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ...
ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது.
அச் சிறப்பு மிகு கிரிக்கெட் போட்டியில் ஊத்துக்கோட்டை செங்கல்பட்டு காஞ்சிபுரம் அரக்கோணம் ஆலந்தூர்...
விராட் கோலி, டோனி அதிரடியால் ஆஸ்திரேலியாவுக்கு 191 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா, உமேஷ் யாதவ், மார்கண்டே ஆகியோர் நீக்கப்பட்டு தவான், விஜய் சங்கர் மற்றும்...
இந்திய கிரிக்கெட் வாரிய விசாரணை அதிகாரியாக நீதிபதி ஜெயின் நியமனம்
புதுடெல்லி:
டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து அவமரியாதையாக கருத்து தெரிவித்தது சர்ச்சையாக வெடித்தது. இதைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு விசாரணை முடியும் வரை இருவரும் தொடர்ந்து விளையாட இந்திய...






















