புதுக்கோட்டை, ஆக. 20 –
மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி விவசாயிகள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயிர்களுக்கு தேவையான யூரியா உரத்தினை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றியும், மேலும் வேளாண் துறையின் சார்பில் பரிந்துரைக்கும் யூரியா உரத்தின் அளவினை விட பயிர்களுக்கு அதிகப்படியான அளவில் இட்டால் பயிர்களுக்கு எழும் தீமைகள் குறித்தும் விவசாயிகளுக்கு பயன்தரும் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் தெரிவிப்பது யாதெனில் ;
எந்த ஒரு பயிரையும் பசுமையாக கண்ணுக்கு குளிர்ச்சி ஊட்டும் வகையில் காட்சிபடுத்த வைப்பதில் யூரியா உரம் பெரும் பங்கு வகுக்கிறது. எனவே, விவசாயிகள் பயிரின் தேவைக்கு வைப்பதை விட்டு, விட்டு பயிர்கள் அதிக பசுமைத் தன்மையாக காட்சி அளிப்பதற்காகவும், அதிக வளர்ச்சிக்காகவும் வேளாண் அலுவலர்கள் பரிந்துரை செய்யப்பட்ட அளவிற்கு மீறி யூரியா உரங்களை பயிர்களுக்கு இடுவதால், இது உரத்திற்கான செலவினை அதிகப்படுத்தும். மேலும் பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகளையும், பயிரை நோக்கி ஈர்க்கும் பூச்சிகளையும் வரவழைக்கிறது. தொடர்ந்து, அப்பூச்சிகளை கட்டுப்படுத்தவும், பயிரினை பாதுகாக்கவும் மீண்டும் பூச்சிக்கொல்லி மருந்துகளை நோக்கி விவசாயிகள் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது,
எனவே விவசாயிகள் வேளாண் அலுவலர்கள் ஒவ்வொரு பயிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவிலான யூரியா உரத்தை மட்டும் பயன்படுத்துவதன் மூலம் உரச்செலவை குறைக்கலாம். மேலும், நெல்லுக்கு ஏக்கருக்கு 25 கிலோ யூரியா மேலுரமாக போட்டால் போதுமானது. இந்த யூரியாவினை நேரடியாக வயலில் இடாமல் ஒரு எளிய தொழில் நுட்பத்தின் மூலம் அடுத்த 15 நாட்களுக்கு தேவைக்கேற்ப சிறிது சிறிதாக உரமானது பயிருக்கு கிடைக்கும் வகையில் செய்ய வாய்ப்புள்ளது.
அதற்கான வழிவகைகள் என்னவெனில், ஐந்து பங்கு யூரியா எனில் நான்கு பங்கு ஜிப்சம் ஒரு பங்கு வேப்பம் புண்ணாக்கு எடுத்துக்கொண்டு முதலில் யூரியாவையும் வேப்பம் புண்ணாக்கையும் கலந்து யூரியாவின் நிறம் மாறிய பின் ஜிப்சத்தினை கலந்து ஒருநாள் முழுவதும் வைத்திருந்து மறுநாள் இடலாம்.
மேலும் நேரடியாக யூரியா உரத்தை பயிர்க்கு தெளிக்கும் பொழுது நீரில் கரைதல் மற்றும் ஆவியாதல் போன்றவற்றின் மூலம் வீணாகிறது. பயிர்க்கு தெளிக்கும் யூரியாவில் 40 சதம் மட்டுமே பயிர் எடுத்துக் கொள்கிறது. எனவே விவசாயிகள் ஐந்து: நான்கு: ஒன்று என்ற தொழில் நுட்பத்தின் மூலம் யூரியா வீணாவதை தடுக்க முடியும்.
இதனால் வேப்பம் புண்ணாக்கில் உள்ள எண்ணெய் சத்து, யூரியா கசிந்து நீராக வெளியேறுவதை தடுக்கிறது. ஜிப்சம் மேலூரை போல் செயல்பட்டு அடுத்த 15 நாட்களுக்கு சிறிது சிறிதாக பயிருக்கு உரச்சத்தை எடுத்துக் கொடுக்கிறது.
மேலும், விவசாயிகள் நெருப்பை இருக்கு யூரியா விடும் பொழுது வயலில் மாலை நேரங்களில் மட்டும் இட வேண்டும் வயலில் நீர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் மறுநாள் காலையில் லேசாக நீர் கட்டினால் போதுமானது. அதேபோல் காற்று மற்றும் மண்ணின் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பொழுது யூரியா உரம் இடுவதை தவிர்ப்பதே நல்லது ஏனெனில் அதிக வெப்ப நிலையில் யூரியா மிக எளிதாக ஆவி ஆகி சென்று விடும் பயிருக்கு அதன் பயன் கிடைக்காது. சொட்டுநீர் பாசனத்தின் மூலம் யூரியா உரங்களை கொடுக்கும் போது யூரியா வீணாவது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு பயிரின் வேருக்கு அருகிலேயே உரமானது கிடைக்கும்.
எல்லாவற்றையும் விட அடி உரமாக முக்கிய தொழுவரங்களை தேவையான அளவுக்கு இடுவதன் மூலம் மண்ணின் ஊட்டச்சத்து வங்கியாக இவை செயல்பட்டு. பயிர் உர சத்துக்கள் எடுத்துக் கொள்ளும் எடுக்கும் தன்மையும் அதிகரிக்கும். எனவே விவசாயிகள் யூரியாவை தனித்து விடாமல் வேப்பம் புண்ணாக்கு ஜிப்சத்துடன் கலந்து விட்டு உரம் வீணாவதை தவிர்க்கவும் அதுபோன்று அதிகப்படியான உரத்தினை பயிருக்கு இடுவதையும் கைவிட வேண்டும் என விவசாயிகளுக்கு மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி அறிவுறுத்தியுள்ளார்.