7 ஆண்டுகளை நிறைவு செய்தது ‘மைகவ்’ இணையதளம்
பிரதமர் நரேந்திரமோடியால் தொடங்கப்பட்ட ‘மைகவ்’ இணையதளம், 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
ஆன்லைன் தளம் மூலம் மக்களுக்கு நெருக்கமாக, அரசை கொண்டு செல்ல ‘மைகவ்’ (https://www.mygov.in/) என்ற இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்துக்கு தேவையான கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் மக்கள் பகிர்ந்துக் கொண்டனர். இந்த தளம் தனது 7 ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளது.
மக்கள் பங்களிப்பு நிர்வாகத்தை வளர்த்ததில், மைகவ் இணைய தளத்தின் பங்களிப்பை நினைவு கூறும் நிகழ்ச்சி, ‘நேர்மறையான எனது அரசு (MyGov Positive ) என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டது. சமூக இணையதளத்தை நேர்மறையாக பயன் படுத்துவதை ஊக்கு விப்பதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப் பட்டது.
கொரோனா பற்றி தவறான தகவல்கள் நாட்டில் பரவும் நிலையில், மைகவ் இணையதளத்தின் கொரோனா உதவி மையம் - வாட்ஸ் அப் கலந்துரையாடல் மூலம் பொய் செய்தி களுக்கும் பதில் அளிக்கும் வகையில் நம்பகமான செய்திகளை வழங்கியது.
மக்களை ஈடுபாடு கருத்தை முன்னெடுத்துச் சென்று, சிறந்த நிர்வாக இலக்கை அடைய, மைகவ் உத்தரப்பிரதேசம் இணையதளத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோர் இணைந்து இன்று தொடங்கி வைத்தனர்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இத் துறை செயலாளர் அஜய் பிரகாஷ் ஷானே, மைகவ் இணையதள தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
மைகவ் குழுவின் பங்கை பாராட்டிய மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘மக்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் அளிப்பதன் மூலம், அனைத்தும் உள்ளடங்கிய நல்ல நிர்வாகத்தை ஏற்படுத்தும் பிரதமரின் கனவை நனவாக்க மைகவ் இணையதளம் பணியாற்றியுள்ளது’’ என்றார்.
ஆட்சி நிர்வாகம் மற்றும் வளர்ச்சியில் மக்களின் தீவிர பங்களிப்பை ஊக்குவிப்பதில் மைகவ் இணையதளம் ஆற்றிய புதுமையான பங்கை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் பாராட்டினர்.
புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
புதுச்சேரி, மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு புனித ஜெயராக்கினி அன்னையின் திருக்கொடி...
புதுச்சேரியில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் கைது : உல்லாசமாக வாழ திருட்டில்...
புதுச்சேரி, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி யூனியன் பிரதேசம், புதுச்சேரியில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். மேலும் அவர்...
உழவர்கரையில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309 ஆம் ஆண்டு பெருவிழா …
புதுச்சேரி, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு பெருவிழா ஆடம்பர தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின்...
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க இந்தியா தயார் – 5 நகரங்களில் ராணுவம் உஷார்
புதுடெல்லி:
காஷ்மீரில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை நேற்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானில் உள்ள பாலகோட் முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அந்த முகாமில் இருந்த சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இது தவிர...
அபிநந்தன் உடலில் பாகிஸ்தான் உளவறியும் சாதனங்களை பொருத்தியதா?: ஸ்கேன் முடிவு வெளியானது
புதுடெல்லி:
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்திய விமானப்படை தளபதி தனோவாவை சந்தித்து பாகிஸ்தானில் தனக்கு நேர்ந்தது பற்றி விங் கமாண்டர் அபிநந்தன் விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து, டெல்லி ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி...
புதுச்சேரி பாஜகவில் இணைந்த 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மகளிர்கள் …
புதுச்சேரி, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலிச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குருசுக் குப்பம் பகுதி சேர்ந்த சீனு தலைமையில் இளைஞர்கள் மகளிர்கள் சட்டமன்ற உறுப்பினர் வி பி ராமலிங்கம் முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குரூசுக்குப்பம்...
திரிணாமுல் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி முன்ஜாமின் பெற்றார்
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது கிருஷ்ணகஞ்ச் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
இந்நிலையில், எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ் வங்காளதேசம் நாட்டின் எல்லைப்பகுதியான நாடியா மாவட்டம், புல்வாரியில் உள்ள...
வேலையின்மை அதிகரிப்பை ஏற்க மோடி அரசு மறுக்கிறது-ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி பல்கலைக்கழக மாணவர்களுடன் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் நேற்று கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி பேசியதாவது:-
நாட்டில் வேலையின்மை அதிகரிப்பு பிரச்சினை கவலை அளிக்கிறது. இதை ஒரு பிரச்சினையாக பிரதமர் நரேந்திர...
மீனவர்களுக்கான தேசிய நலத்திட்டம் … மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா
சென்னை, பிப். 12 -
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக நேற்று பதில் அளித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா கூறியதாவது:
மீனவர்களின் நலனுக்காக ‘நீலப் புரட்சி’, மீனவர்களுக்கான தேசிய நலத்திட்டம் போன்றவற்றை மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் அமல்படுத்தியது. நீலப் புரட்சி...





















