ஆண்டுக்கு $ 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு சேவை ஏற்றுமதியை அதிகரிப்பதில் ஐடி தொழில் துறை முக்கிய பங்காற்ற...
டெல்லி, ஜன. 17 -
இந்தியாவின் சேவைத்துறை ஏற்றுமதியை $ 1டிரில்லியன் அளவுக்கு அதிகரிக்கும் வகையில், வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்...
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் – சரத்பவார் அறிவிப்பு
புனே:
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்பவார் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மதா தொகுதியில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என புனே நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத்பவார் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை...
துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தி திருப்பதி கோவிலில் இலங்கை பிரதமர் வழிபாடு
திருமலா:
இந்தியாவின் அண்டைநாடான இலங்கையின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்து செல்வது வழக்கம்.
அவ்வகையில், வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கொழும்புவில் இருந்து தனது மனைவி மைத்ரீ விக்ரமசிங்கேவுடன் நேற்று மாலை...
உயிரிழந்த 36 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை:
விபத்து, உடல்நலக் குறைவால் உயிரிழந்த 36 தீயணைப்பாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் தீயணைப்பு நிலைய டிரைவர் வேம்பு, முசிறி தீயணைப்பு நிலைய வீரர் சீனிவாசன், மற்றும் நிலைய அலுவலர் இளங்கோவன்,...
பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு
பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். #cycloneFani
புதுடெல்லி
பானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவை சூறையாடியது. புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. கடலோர மாவட்டங்கள்...
ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு 39 தொகுதி, உ.பி.யில் பிரியங்காவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு-ராகுல் காந்தி திட்டம்
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.
அரசியல் களத்தில் கால் பதித்துள்ள பிரியங்கா காந்தி வருகை காங்கிரசாரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் கட்சி தொண்டர்களை சந்திப்பது, சுற்றுப் பயணம் என மும்முரமாக உள்ளார். கடந்த 11-ந்தேதி...
தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றம்: நிதின்கட்கரி தகவல்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய நெடுஞ்சாலைகளில், மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.
அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
உச்சநீதிமன்றம் கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி 500 மீட்டர் தூரத்தில் உள்ள மதுக்கடைகள், உள்ளாட்சி அமைப்புகளில் 20,000 மக்கள் தொகை உள்ள பகுதியாக இருந்தால் 220 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என கூறியிருந்தது.
அதன்படி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. மேலும், மோட்டார் வாகன சட்டத்தின் 185வது பிரிவின் கீழ் குடிபோதையில் வாகனம் ஓட்டினால், சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுகிறது. அதோடு, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வையும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மேற்கொள்கிறது.
மதுக்கடைகள் மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், மதுக்கடைகள் அகற்றப்பட்ட தரவுகளை மத்திய அரசு சேகரிக்கவில்லை.
நவீன பேருந்து நிலையங்கள்:
12வது ஐந்தாண்டு திட்டத்தில் அமல்படுத்த, நவீன பேருந்து நிலையங்கள் உருவாக்கும் திட்டத்தை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. நவீன பேருந்து நிலையங்கள் அமைக்க, இத்திட்டம் நிதியுதவி அளிக்கும். இதற்கான மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் 2018 செப்டம்பரில் வழங்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வலியுறுத்தல்
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காகவும், தேர்தல் பணிகளை ஆய்வு...
குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கான நிதியுதவிகள் : மாநிலங்களவையில்அமைச்சர் நாராயண் ரானே தகவல் !
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளதாக இத்துறையின் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கூறியுள்ளார்.
அவர் மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
* குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) ரூ.20,000 கோடி மதிப்பில் துணை கடன்.
* எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் உட்பட தொழில்களுக்கு அவசரகால கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.4.5 லட்சம் கோடி உத்திரவாதம் இன்றி தானியங்கி கடன்கள்.
* எம்.எஸ்.எம்.இ. நிதி மூலம் Rs.50,000 கோடி பங்குத் தொகை உட்
செலுத்துதல்.
* இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கிக்கு (SIDBI) ரூ.15,000 கோடி
சிறப்பு மறு நிதியளிப்பு வசதி.
* சிறு நிதி நிறுவனங்கள் மூலம், 25 லட்சம் பேருக்கு கடன் உத்திரவாதத்துடன் கூடிய வசதி.
* இந்த நிதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி சிறப்பு பணப் புழக்க திட்டம்.
* வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்களுக்கு
ரூ.90,000 கோடி கடன் உத்திரவாத திட்டம்.
கொரோனா பாதிப்பு காரணமாக, வரி செலுத்துவோர் சந்தித்த சவால்களை கருத்தில் கொண்டு,
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உட்பட பல தொழில் நிறுவனங்களுக்கு வரி தொடர்பான பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
* வரிச்சட்டங்களின் கீழ் பல இணக்கங்களுக்கு கால வரப்பு நீட்டிக்கப்
பட்டது.
* விவாத் சே விஸ்வாஷ் சட்டத்தின் நேரடி வரியின் கீழ் வரித்தாக்கலுக்கான தேதி நீட்டிப்பு.
* பெருநிறுவன வரிகள் திருப்பி செலுத்தப்பட்டன.
* வருமானவரி சட்டத்தின் கீழ் வரிப்பிடித்தம் கூறும் தகுதியான
தொடக்க நிறுவனங்களுக்கு இணைப்பு தேதி நீட்டிக்கப்பட்டது.
* வருமானவரி சட்டத்தின் 6ஏ பி பிரிவின் கீழ் பலவிதமான
முதலீடுகளுக்கு வரிப்பிடித்தம் கோருவதற்கான
கடைசி தேதியும் நீட்டிக்கப்பட்டது.
* தாமதமாக செலுத்தப்படும் வரிகளுக்கு ஆண்டுக்கு 18 சதவீதம் என்ற வட்டிக்கு பதிலாக வட்டி தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
காதி இயற்கை வண்ணப்பூச்சு தொடக்கம்:
காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு, பசுஞ்சாணத்திலிருந்து, ஜெய்ப்பூரில் உள்ள குமரப்பா தேசிய கைவினை காகித மையத்தால் (KNHPI) உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜெய்ப்பூரில் உள்ள காதி மற்றும் கிராம தொழில்
ஆணையத்தின் ஆலை. காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு சுற்றுச்
சூழலுக்கு உகந்தது மற்றும் மலிவானது என குமாரப்ப காகித மையம்
நடத்திய ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காதி வண்ணப்பூச்சு, காசியாபாத்தில் உள்ள தேசிய பரிசோதனை
மையம், மும்பையில் மத்திய அரசின் தேசிய பரிசோதனை மையம்,
தில்லியில் உள்ள ஸ்ரீராம் தொழில் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில்
பரிசோதிக்கப்பட்டது. வண்ணப்பூச்சுக்கு தேவையான அளவுருக்களை இது நிறைவு செய்துள்ளது.
காதி வண்ணப்பூச்சுக்கு பசுஞ்சாணம் பயன்படுத்தப்படுவது, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும், கிராமங்களில் நிலையான வேலைவாய்ப்பை
உருவாக்கும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை பெற்று தரும்.
காங்கிரஸ் எம்எல்ஏ உமேஷ் ஜாதவ் ராஜினாமா
பெங்களூரு :
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இதில் மந்திரி பதவி கிடைக்காததால் நாகேந்திரா, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி ஆகியோரும், மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் ரமேஷ் ஜார்கிகோளியும் காங்கிரஸ் கட்சி மற்றும் அக்கட்சி தலைவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருந்து...