கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டு .. பாண்டிச்சேரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிகளில்...
பாண்டிச்சேரி, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத்குமார் …
கிறிஸ்துவர்களின் சாம்பல் புதன் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது. அதனை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.
https://youtu.be/dFqr5s2ta0A
இயேசு...
பிரதமர் நரேந்திர மோடியால் 2016-ல் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சிக்கு ஜம்மு காஷ்மீரின் பங்களிப்பாக ஊதா புரட்சி...
டெல்லி, ஜன. 17 -
முதலாம் தேசிய ஸ்டார்ட் அப் தினத்தை நாம் இன்று கொண்டாடுகிறோம் என்று கூறிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும்...
உ.பி.யில் 4 நாள் பயணம்-பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்
லக்னோ:
பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவருக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 41 எம்.பி. தொகுதிகளை இவர் கவனிப்பார்.
தீவிர அரசியலில் குதித்துள்ள பிரியங்கா காந்தி 4 நாட்கள் உத்தரபிரதேசத்தில் முகாமிட்டு தேர்தல்...
குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கான நிதியுதவிகள் : மாநிலங்களவையில்அமைச்சர் நாராயண் ரானே தகவல் !
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளதாக இத்துறையின் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கூறியுள்ளார்.
அவர் மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
* குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) ரூ.20,000 கோடி மதிப்பில் துணை கடன்.
* எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் உட்பட தொழில்களுக்கு அவசரகால கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.4.5 லட்சம் கோடி உத்திரவாதம் இன்றி தானியங்கி கடன்கள்.
* எம்.எஸ்.எம்.இ. நிதி மூலம் Rs.50,000 கோடி பங்குத் தொகை உட்
செலுத்துதல்.
* இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கிக்கு (SIDBI) ரூ.15,000 கோடி
சிறப்பு மறு நிதியளிப்பு வசதி.
* சிறு நிதி நிறுவனங்கள் மூலம், 25 லட்சம் பேருக்கு கடன் உத்திரவாதத்துடன் கூடிய வசதி.
* இந்த நிதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி சிறப்பு பணப் புழக்க திட்டம்.
* வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்களுக்கு
ரூ.90,000 கோடி கடன் உத்திரவாத திட்டம்.
கொரோனா பாதிப்பு காரணமாக, வரி செலுத்துவோர் சந்தித்த சவால்களை கருத்தில் கொண்டு,
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உட்பட பல தொழில் நிறுவனங்களுக்கு வரி தொடர்பான பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
* வரிச்சட்டங்களின் கீழ் பல இணக்கங்களுக்கு கால வரப்பு நீட்டிக்கப்
பட்டது.
* விவாத் சே விஸ்வாஷ் சட்டத்தின் நேரடி வரியின் கீழ் வரித்தாக்கலுக்கான தேதி நீட்டிப்பு.
* பெருநிறுவன வரிகள் திருப்பி செலுத்தப்பட்டன.
* வருமானவரி சட்டத்தின் கீழ் வரிப்பிடித்தம் கூறும் தகுதியான
தொடக்க நிறுவனங்களுக்கு இணைப்பு தேதி நீட்டிக்கப்பட்டது.
* வருமானவரி சட்டத்தின் 6ஏ பி பிரிவின் கீழ் பலவிதமான
முதலீடுகளுக்கு வரிப்பிடித்தம் கோருவதற்கான
கடைசி தேதியும் நீட்டிக்கப்பட்டது.
* தாமதமாக செலுத்தப்படும் வரிகளுக்கு ஆண்டுக்கு 18 சதவீதம் என்ற வட்டிக்கு பதிலாக வட்டி தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
காதி இயற்கை வண்ணப்பூச்சு தொடக்கம்:
காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு, பசுஞ்சாணத்திலிருந்து, ஜெய்ப்பூரில் உள்ள குமரப்பா தேசிய கைவினை காகித மையத்தால் (KNHPI) உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜெய்ப்பூரில் உள்ள காதி மற்றும் கிராம தொழில்
ஆணையத்தின் ஆலை. காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு சுற்றுச்
சூழலுக்கு உகந்தது மற்றும் மலிவானது என குமாரப்ப காகித மையம்
நடத்திய ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காதி வண்ணப்பூச்சு, காசியாபாத்தில் உள்ள தேசிய பரிசோதனை
மையம், மும்பையில் மத்திய அரசின் தேசிய பரிசோதனை மையம்,
தில்லியில் உள்ள ஸ்ரீராம் தொழில் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில்
பரிசோதிக்கப்பட்டது. வண்ணப்பூச்சுக்கு தேவையான அளவுருக்களை இது நிறைவு செய்துள்ளது.
காதி வண்ணப்பூச்சுக்கு பசுஞ்சாணம் பயன்படுத்தப்படுவது, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும், கிராமங்களில் நிலையான வேலைவாய்ப்பை
உருவாக்கும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை பெற்று தரும்.
புதுச்சேரியில் ஒரே சாலையில் நடைப்பெற்ற இரு இடங்களில் நடைப்பெற்ற கொள்ளை : ரூ.9.80 இலட்சத்தை கொள்ளயடித்த பிரபல பெங்களூர்...
புதுச்சேரி, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி யூனியன் பிரதேசம், விழுப்புரம் நெடுஞ்சாலை மூலகுளம் சந்திப்பில் முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான கேஸ் ஏஜென்சி அலுவலகம் உள்ளது. மேலும் அதே சாலையில் ரத்தனா ஸ்டோர்ஸ் என்கிற பாத்திர கடை அமைந்துள்ளது,
https://youtu.be/yH05V3vsRtQ
இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி...
பங்குனி உத்திரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. சபரிமலை கோவிலுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார். இங்கு நடைபெறும் மகர விளக்கு பூஜை, மண்டல பூஜை காலங்களில் விரதம் இருந்து மாலை அணிந்து...
விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து விபத்து : விமானி காயம்
மத்திய பிரதேசத்தில் விமானப்படையின் பயிற்சி விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் விமானப்படையின் பயிற்சி விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பாராசூட் மூலம் விமானி தப்பினார்.
ராகுல் காந்தி இன்று திருப்பதி வருகை – சாமி தரிசனத்திற்கு பின் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
திருப்பதி:
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பதி வருகிறார். இதற்காக அவர் விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து சாலை வழியாக அவர் திருப்பதி கோவிலுக்கு செல்ல உள்ளார்.
மதியம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தாரக ராமா மைதானத்தில்...
கொல்கத்தாவில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இணைய வானொலி அமைப்பு அறிமுகம்
இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களில் முதல் முறையாக, கொல்கத்தாவில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இணைய வானொலி அமைப்பு (ரேடியோ ஓவர் இன்டெர்நெட் புரோட்டோக்கால்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நீண்டதூர கடல்சார் தகவல் தொடர்பை இதன் மூலம் சிறப்பாக மேற்கொள்ள முடியும். மழைக்காலங்கள் மற்றும் மோசமான வானிலைகளின் போது கொல்கத்தாவில்...
தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் ரோபாக்ஸ் மற்றும் நீர் டாக்சி சேவைகள் – மத்திய இணையமைச்சர் சாந்தனு தாக்கூர்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்
பூர்வமாக பதிலளித்த துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள்
இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் கீழ்காணும் தகவல்களை
அளித்தார்.
நீர்வழி போக்குவரத்து என்பது செலவு குறைவானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் நிலையில், ரோபாக்ஸ் திட்டங்களை
பல்வேறு வழித்தடங்களில் சாகர் மாலா திட்டத்தின் கீழ் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் 7 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு, 14 திட்டங்கள் செயல்படுத்துதலின் கீழும் 50 திட்டங்கள் உருவாக்கத்திலும் (மொத்தம் 70) உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 3 திட்டங்கள் உருவாக்கத்தில் உள்ளன.
இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா 2020-ஐ பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களின் ஆலோசனைக்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் வெளியிட்டது.
பெறப்பட்டுள்ள ஆலோசனைகளை அமைச்சகம் கவனமாக பரிசீலித்து வருகிறது. இந்திய துறைமுகங்கள் சட்டம் 2021 ல்
அவை முறையாக சேர்க்கப்படும். சில மாநில அரசுகளிடம் இருந்து
ஆலோசனைகள் இன்னும் வரவில்லை.
திறன் இடைவெளி ஆய்வு 21 கடலோர மாவட்டங்களில் மேற் கொள்ளப்பட்டது. துறைமுகம் மற்றும் கடல்சார் துறைக்கு சிறப்பு
கவனம் வழங்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
கட்டுமானம், சரக்கு போக்குவரத்து, சுற்றுலா மற்றும் உற்பத்தி ஆகிய
துறைகளில் திறன்மிக்க பணியாளர்களுக்கான தேவை இருப்பது
ஆய்வில் கண்டறியப்பட்டது.
பல்திறன் மேம்பாட்டு மையத்தை விசாகப்பட்டினம் துறைமுக பொறுப்பு கழகத்தில் நிறுவ முடிவெடுக்கப்பட்டது. செயல்படுத்துதல் மற்றும் மேலாண்மை பங்குதாரரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, விசாகப்பட்டினம் துறைமுக பொறுப்பு கழகத்தில் உள்ள கட்டிடம் பங்குதாரரிடம் வழங்கப்பட்டு விட்டது.























