நூற்றாண்டு கண்ட மீஞ்சூர் அரசு பள்ளியில் நடைப்பெற்ற புதிய கட்டிடம் திறப்பு விழா : பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...
மீஞ்சூர், ஜூன். 28 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேரடி தெருவில் உள்ள அரசு உதவி தொடக்கப்பள்ளி நூறாண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று முடிந்து அதற்கான திறப்பு விழா நடைபெற்றது.
இப்பள்ளியின் கட்டடப்பணிகளுக்காக என்.டி.சி.எல் நிறுவனத்தின்...
ஓடும் பேருந்தில் வயது முதிர்ந்த பயனியிடம் 7 சவரன் தங்க நகையை பறித்து தப்பிவோட முயன்ற திருடன் :...
திருத்தணி, ஜூன். 28 -
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேவுள்ள காளஹஸ்தி பகுதியில் வசித்து வருபவர்கள், சுந்தரம் கிருஷ்ணம்மா தம்பதிகள். இந்நிலையில் இவர்கள், அரக்கோணத்தில் நடைபெற்ற அவர்களது உறவினரின் திருமணத்தில் பங்கேற்க காளஹஸ்தியிலிருந்து திருத்தணிக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்தனர்.
மேலும் இவ்விழாவில் கிருஷ்ணம்மாள் அணிவதற்காக 7 சவரன் தங்கநகையை...
வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வரும் பொன்னேரி வழக்கறிஞர்கள் …
பொன்னேரி, ஜூன். 27 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள 6 நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு இன்று தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பொன்னேரி நீதிமன்றத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வழக்குகளுக்காக பொன்னேரி நீதிமன்றத்தை நாடியதாகவும், இந்நிலையில் அவ்வழக்குகளை மாதவரம் நீதிமன்றத்திற்கு பொன்னேரி...
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை – 2023 … வெற்றிப் பெற்ற வருவாய் துறை அணியினருக்கு...
பொன்னேரி, ஜூன். 27 –
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2023க்கான விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வந்த நிலையில் அதில் தேர்வான அணிகள் எதிர்வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சென்னையில் 17 இடங்களில் முதலமைச்சர் கோப்பை –...
சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மீஞ்சூரில் காவல்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பிரச்சார...
மீஞ்சூர், ஜூன். 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்களும் இணைந்து நடத்திய போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி அப்பகுதியில் நடைப்பெற்றது.
முன்னதாக சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஆவடி காவல் ஆணையர் அருண் பொது...
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவ முகாம் …
மீஞ்சூர், ஜூன். 26 -
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இலவச மெகா மருத்துவ சிறப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், காயிதேமில்லத் அறக்கட்டளையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வார்டு அரியன்வாயல் பகுதியில் எம்....
லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் செங்குன்றம் நல்லூர் சுங்கச்சாவடியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ….
திருவள்ளூர், ஜூன். 26 -
சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்குன்றம் அடுத்துள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் யூ டர்னை அடைத்து விட்டு கட்டாய வசூல் செய்வதாக குற்றம் தெரிவித்து இன்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
மேலும் இப்பிரச்சினைக் குறித்து விரைந்து நடவடிக்கை...
ஒரே நேரத்தில் அருள் வந்து சாமி ஆடிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் : மேப்பூர் தாங்கல் அருகே அருள்மிகு...
பூவிருந்தமல்லி, ஜூன். 26 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள பூவிருந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மேப்பூர் தாங்கல் பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயமாகும். மேலும் இத்திருக்கோயிலில் நடைப்பெற்ற அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தின் போது, அடிக்கப்பட்ட மேளதாள ஓசைக்கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலும் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்...
திருவள்ளூர், ஜூன். 26 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் கடந்த சனிக்கிழமை ஜூன் 24 ஆம் தேதியன்று மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் ( திஷா ) மாவட்ட ஆட்சித்தலைவரும் உறுப்பினர் செயலாளருமான...
ஆரணி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற ரூ. 21 இலட்சம் மதிப்பிலான புதிய கழிப்பறை கட்டடத் திறப்பு...
ஆரணி, ஜூன். 23 –
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் அரசு மகளிர் மேல்நிலைபள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவிர்கள் ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளியில் மாணவர்களுக்கான போதுமான கழிப்பிட வசதிகள் இல்லாத நிலையில்,...























