கோவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்
கோவை:
தொண்டாமுத்தூர் அருகே உள்ள போளுவாம் பட்டியை சேர்ந்த சவுந்தர் ராஜன் என்பவரது மகள் கல்பனா என்ற சவுடேஸ்வரி(21). பி.சி.ஏ. பட்டதாரி. இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து நிச்சயித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 14-ந் தேதி மணியகாரம்பாளையத்தில் உள்ள உறவினரை பார்க்க சென்ற கல்பனா...
கோவை: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய என்ஜினுடன் உதகை மலை ரயில் சேவைத் துவக்கம் ..
கோயம்புத்தூர், செப். 5 -
மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்திற்கு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்ட நீலகிரி மலைரயிலுக்கான புதிய நீராவி என்ஜின் வந்தடைந்துள்ளது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை செல்லும் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள...
குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாத விரக்தி – எம்.பி.பி.எஸ். மாணவியின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
சிங்காநல்லூர்:
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எஸ்.எச். காலனி கங்கா நகரை சேர்ந்தவர் வரதராஜலு (வயது 49). தனியார் கம்பெனியில் டிரைவராக இருந்தார்.இவரது மனைவி உமா (36). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்
இந்நிலையில் வரதராஜலுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை நிறுத்த அவர் முடிவு...
கோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து-கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி
கோவை:
தஞ்சாவூரை சேர்ந்தவர் பாலாஜி(வயது 22). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் இஸ்கான் கோவில் சாலையில் இருந்து ஜென்னி கிளப் பகுதியை நோக்கி வந்தார். கொடிசியா சாலையில் வந்த போது, கட்டுப்பாட்டை...
கோவையில் நள்ளிரவில் கோவிலில் 1½ அடி உயர ஐம்பொன் சாமி சிலை திருட்டு
கோவை:
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது.
இங்கு 1½ அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கோவிலில் சாமி சிலை திருடப்பட்டு இருப்பதையும், உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து...
கோவையில் தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி
குனியமுத்தூர்:
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பாலமுருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 37). தச்சுதொழிலாளி. இவரது மனைவி பாக்கியம் (34). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் பாபுராஜூக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பி.கே. புதூரை சேர்ந்த ஒருபெண்ணும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால்...
கோவையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, பணம் திருட்டு
கோவை:
கோவை வெள்ளலூர் எல்.ஜி.நகரை சேர்ந்தவர் நிர்மர்குமார். இவர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் சிவில் சப்ளை பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு, நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை...
அதிமுக கூட்டணி எதிரொலி – பாமக துணை தலைவர் பதவியில் இருந்து விலகினார் நடிகர் ரஞ்சித்
கோவை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவித்தார்.
கோவையில் நடிகர் ரஞ்சித் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்....
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 6 வது பேரவைக்கூட்டம் : பண்டிகைக் கால முன் பணமாக ரூ.10...
தமிழ்நாடுஅரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 6வது பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு பண்டிகை முன்பணமாக 10,000 தமிழக அரசு வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கும்பகோணம், அக். 17 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க 6வது மாவட்ட...
பொள்ளாச்சி அருகே கார் மீது லாரி மோதல்-2 பேர் பலி
பொள்ளாச்சி:
சிவகங்கையை சேர்ந்தவர் கவின்செல்வன்(வயது 35). இவர் மூலநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதற்கு சிகிச்சை பெறுவதற்காக நேற்று கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு காரில் சென்றார். அவருடன் அவரது தந்தை சுப்பிரமணி (55), மாமனார் கந்தசாமி(60) ஆகியோர் உடன் சென்றனர். அங்கு மருந்து, மாத்திரைகள் வாங்கிக் கொண்டு இன்று காலை ஊர்...
















