போலி இன்வாய்ஸ்கள் மூலம் ரூ.4500 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளில் ஈடுப்பட்ட 636 நிறுவனங்கள் … மூளையாக செயல்பட்டவர் கைது...
டெல்லி, ஜன. 14 -
ரூ 4,500 கோடிக்கும் அதிகமான போலி இன்வாய்ஸ்கள் தொடர்பான கும்பலை ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சில போலி நிறுவனங்களுக்கு எதிராக ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகத்தால் சமீபத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, இந்த போலி நிறுவனங்களுக்குப்...
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டுவர மம்தா தீவிர முயற்சி
புதுடெல்லி:
மத்தியில் பா.ஜனதா அரசு மீண்டும் வருவதை தடுக்க எதிர்க்கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
இதற்காக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து கூட்டணி உருவாக்க முயற்சி நடக்கிறது.
ஆனாலும், சில மாநிலங்களில் அரசியல் சூழ்நிலை வேறு மாதிரி இருப்பதால் தேசிய அளவிலான கூட்டணியை...
புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட வாலிபர் கைது : முத்தியால்பேட்டை போலீசார் துரித நடவடிக்கை...
புதுச்சேரி, மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..
புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசியத் தகவல் வந்துள்ளது. அத் தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் குரு தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு...
இன்று மாலை நடைதிறப்பு-பெண்கள் வர வாய்ப்புள்ளதால் சபரிமலையில் மீண்டும் பதட்டம்
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு ஐயப்ப பக்தர்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளும் கேரளாவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சபரிமலை கோவில் நடைதிறப்பின்போது, சபரிமலை செல்லும் இளம்பெண்களையும்...
45.73 கோடிக்கும் அதிமான கொவிட் தடுப்பூசி டோஸ்களை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 45.73 கோடிக்கும் அதிகமான (45,73,30,110) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 24,11,000 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 43,80,46,844 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 2.28 கோடி (2,28,27,959) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
இரவு 10 மணிக்குள் அனைத்து விதமான மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் … புதுச்சேரி கலால்துறை ஆணையர் மேத்யூஸ்...
புதுச்சேரி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரியில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இரவு 10-மணிக்குள் அனைத்து வகையான மதுபானக் கடைகளையும் மூட வேண்டுமென கலால்துறை துணை ஆணையர் மேத்தியூஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை...
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தார்
அப்போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுவின்...
புல்வாமாவில் இறந்த வீரர்களின் பிணங்களை வைத்து அரசியல் செய்வதா? -மோடி மீது மம்தா பாய்ச்சல்
கொல்கத்தா:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தலைமையில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளையும் கைப்பற்றியே தீர வேண்டும். மோடி அரசை வீழ்த்த வேண்டும் என...
அபினந்தனை வரவேற்க வாகா எல்லையில் திரண்ட பொதுமக்கள்
புதுடெல்லி:
எல்லையில் நடந்த தாக்குதலின்போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் சிறைப்பிடித்தது. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, போர்க் கைதியாக பிடிபட்டுள்ள அபினந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. மேலும் அபினந்தனை விடுவிப்பதற்காக ராஜாங்கரீதியாகவும் தீவிர முயற்சி மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள...
கார்கில் 22 ஆம் ஆண்டு வெற்றி தினம் – பாராமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத்...
கார்கில் 22ம் ஆண்டு வெற்றி தினத்தில், பாரமுல்லாவில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன், ஜம்மு மற்றும் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் ஷின்ஹா, சினார் படைப்பிரிவு தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.பாண்டே ஆகியோர் உடன் சென்றனர்.
1999ம் ஆண்டு கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு, பாரமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பாரமுல்லா ராணுவப் பிரிவு தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், குடியரசுத் தலைவரை வரவேற்று, பாரமுல்லாவின் வரலாறு மற்றும் சுதந்திரத்துக்குப்பின் இங்கு மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளை விளக்கினார்.
அதன்பின் மேதகு குடியரசுத் தலைவர், பாரமுல்லா பிரிவு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பாரமுல்லா பயணத்துக்குப்பின், குல்மார்க் சென்ற குடியரசுத் தலைவர், அங்குள்ள போர் பயிற்சி பள்ளியை பார்வையிட்டார். அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு விவரிக்கப்பட்டது.



















