திருவண்ணாமலை, ஜூலை. 27-

தமிழ்நாடு அரசு, வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயனைத் தரக்கூடிய வேளாண் இயந்திரங்களான 2-மண் தள்ளும் இயந்திரங்கள், 6-டிராக்டர்கள், 2-டயர் வகை மண் அள்ளும் இயந்திரங்கள் இருப்பில் உள்ளன. மேலும், நிலம் சமன் செய்தல், உயர் பாத்தி அமைத்து, விதைத்தல், கரும்பு, காய்கறி நாற்று நடவு செய்தல், உரத்துடன் விதை விதைத்தல், களை எடுத்தல், அறுவடை, பல்வேறு பயிர்களை கதிரடித்தல், வைக்கோல் கட்டுதல், நிலத்தில் நிலக்கடலை பயிரை தோண்டி எடுத்தல், உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கும் டிராக்டரால் இயங்கக்கூடிய இயந்திங்களும் வேளாண் பொறியியல் துறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்று, டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ.340 – என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.  மண் அள்ளுவதற்கும், பண்ணைக் குட்டைகள் அமைத்திடவும், புதர்களை அகற்றவும், சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் மணிக்கு ரூ.660 -க்கும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

எனவே, மேலே குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் கீழ்க்கண்ட முகவரியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உபகோட்ட அலுவலகத்தினை அணுகி பயனடையுமாறும்,  தொடர்புக்கு கீழ்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் இ.ஆ.ப., அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 உதவி செயற்பொறியாளர் (வே.பொ) திருவண்ணாமலை அவர்களின் அலைபேசி எண்: 9443492538. உதவி செயற்பொறியாளர்(வே.பொ) ஆரணி அவர்களின் அலைபேசி எண்: 9442975898.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here