தமிழ்நாடு சீருடைப் பயணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வான 968 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக இன்று ஜூலை 26-2021 தலைமைச்செயலகத்தில் 10 நபர்களுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தடய அறிவியல் துறையில் இள நிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வான 62 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
சென்னை, ஜூலை 26.2021-
இதில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வான 968 நபர்களில் தாலூகா காவல் நிலையங்களுக்கு 660 நபர்களும், ஆயுதப்படைக்கு 225 நபர்களும் தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்கு 39 நபர்களும் பணியில் சேர்கின்றனர். இதில் 281 பெண் காவல் உதவி ஆய்வாளர்களும் அடங்குவர் . இவர்கள் தமிழ்நாடு உயர் பயிற்சியகத்தில் ஒர் ஆண்டுகாலம் அடிப்படை பயிற்சி பெறுவார்கள்.
மேலும் குற்ற நிகழ்வுகளில் குற்றவாளிகளைக் கண்டறிய சேகரிக்கப்படும் சான்று பொருள்களை அறிவியல் ஆய்வு மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரும் பணியை மேற்கொள்ளும் பணியை செய்யும் துறைதான் தடய அறிவியல் துறையாகும் . அதில் முக்கிய பொறுப்பு வகிக்கும் பணியை செய்பவர்கள்தான் தற்போது இத்துறைக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வான இளநிலை அறிவியல் அலுவலர்கள் இந்த 62 நபர்களும், மாநகரங்கள் மற்றும் மாவட்ட ஆய்வுக் கூடங்களில் இவர்கள் பணியமர்த்தப் படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சியின் போது தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, உள்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர்,காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலந்திர பாபு, காவல்துறை கூடுதல் இயக்குநர் (நிர்வாகம் ) முனைவர் எம்.ரவி,தடய அறிவியல் துறை இயக்குநர் மா.சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.