தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று 28.07.2021 கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முடிவுற்ற ரூ.65 லட்சம் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சென்னை, ஜூலை-29,

தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சியின் திருவிக நகர் மண்டலம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபாலபுரத்தில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.17.37 இலட்சம் மதிப்பீட்டல் கட்டி முடிக்கப் பட்ட ஸ்மார்ட் கட்டம், திருவிக நகர் பிரதான சாலையில் ரூ.28.28 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள், பல்லவன் சாலையில் ரூ.19.41 இலட்சம் மதிப்ப்பீட்டில் நீத்தார் நினைவுக் கூடம் என ரூ.65 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து டான் பாஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அனிதா அச்சீவர்ஸ் அகடாமி சார்பில் 360 மகளிருக்கு தையல் மிஷின்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.

பின்பு ,கொளத்தூர் சட்மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அனிதா அச்சீவர்ஸ் அகடாமி சார்பில் 223 மாணக்கர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பெறுவதற்கான ஆணைகளையும் பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு புத்தகப் பைகள் நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உப கரணங்கள் மற்றும் மடிக்கணினிகளும், பொதுமக்கள் வாழ்வாதார பொருளாதாரத்தை ஈட்டும் வகையில் அவர்களுக்கு நான்கு சக்கர தள்ளு வண்டிகள், மீன்பாடி வண்டிகள், மாவு அரவை இயந்திரங்கள், மூன்று சக்கர மோட்டார் வாகனங்களையும், மருத்துவம் மற்றும் திருமண உதவிகள் ஆகிய நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய முதலமைச்சர் கோவிட் தடுப்பூசி மையத்தையும் பார்வையிட்டார்.

மேலும் பூம்புகார் நகர் 1 வது பிரதான சாலையில் அரசு மகளிர் கல்லூரி அமையவிருக்கும் இடத்தையும்,வீனஸ் நகர் 5வது தெருவில் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் ஆண்கள் விடுதிக் கட்டடப் பணியினையும், கணேஷ் நகரில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் நிறுவப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தையும் அப்பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந் நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, முதன்மைச்செயலாளர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங்பேடி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.விஜய ராணி, துணை ஆணையாளர் ( சுகாதாரம் ) டாக்டர் மனீஷ், துணை ஆணையாளர் ஷரண்யா அரி, அனிதா அச்சீவர்ஸ் அகடாமி  முதன்மை செயல் அலவலர் நரேந்திரன் முதன்மை இயக்க அலுவலர் ஹெலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here