சென்னை, அக். 5 –

அக் 5, அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பிறந்த நாளாகும். அந்நாளை இனி தனிப் பெருங்கருணை நாளாக கடைப் பிடிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் அக் 5-1823 ஆம் ஆண்டு பிறந்த அவர், கருணை ஒன்றையே தனது வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்தவர். அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதைக் குறிக்கும் வண்ணம் அவர் சமரச சன்மார்க்கத்தை நிறுவினார். மேலும் வள்ளலார் வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினார்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் அவர்கள் மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். அவர் அன்று ஏற்றிய அடுப்பு இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.

மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகளை எழுதினார். வள்ளலார் பாடிய பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது 6 திருமறைகளாக பகுக்கப்பட்டுள்ளது.

திருவருட்பா 6 ஆம் திருமுறையில் எந்தச் சமயத்தின் நிலைப்பாட்டையும் எல்லா மதநெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்றார். சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர், சத்திய தருமச்சாலையையும் , சித்தி வளாகத்தையும் உருவாக்கினார். பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்துக் காட்டினார். அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி ஆன்ம நேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது. அவர் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாள் எனக் கடைப்பிடிக்கப் படும். என முதலமைச்சர் தனது அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here