நேபாளத்தில் அதிவேகமாக சென்ற ஜீப் ஆற்றில் கவிழ்ந்தது-11 பேர் உயிரிழப்பு
காத்மாண்டு:
நேபாளத்தின் தார்சுலா நகரில் இருந்து துகு பகுதிக்கு நேற்று இரவு ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அதில் தார்சுலா-திங்கார் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையில் இருந்து உருண்டு, 130 அடி ஆழத்தில் உள்ள மகாகாளி ஆற்றில் கவிழ்ந்தது. ஆற்றில் தண்ணீர்...
பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
வாஷிங்டன்:
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. நேற்று இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக...
இந்தியா-மொராக்கோ இடையே புதிய ஒப்பந்தங்கள்- சுஷ்மா முன்னிலையில் கையொப்பமானது
ரபாட்:
அரசுமுறை பயணமாக மொராக்கோ நாட்டுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பவுரிட்டாவை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வேரறுப்பது, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நிதியுதவிகள் செல்வதை தடை செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில்...
சிரியாவில் அரசுப்படைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்-21 வீரர்கள் பலி
டமாஸ்கஸ்:
சிரியா நாட்டில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது சிரியா ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியா நாட்டின் விமானப்படைகளும் கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது...
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்த ரோவர் விண்கலம் 15 ஆண்டுகளுக்கு பின் செயலிழந்தது-நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வாஷிங்டன்:
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கடந்த 2003ம் ஆண்டு ஆபர்ச்சுனிட்டி என்ற ரோவரை டெல்டா 2 ராக்கெட் மூலம் அனுப்பியது.
இதையடுத்து லேசர் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து, ஆபர்ச்சுனிட்டி...
துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி-1,112 பேரை கைது செய்ய உத்தரவு
அங்காரா:
துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் அதிபர் அந்த புரட்சியை முறியடித்தார்.
அமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் தான், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப்...
எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வு ஆகாது – பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் பேச்சு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது பிரதமர் இம்ரான்கான் குறுக்கிட்டார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்டவாறு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சமாதானத்துக்கான நமது விருப்பத்தில், நல்லெண்ண அடிப்படையில் நம்மிடம் காவலில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரி நாளை (இன்று) விடுதலை செய்யப்படுவார்...
பாகிஸ்தான்-சவுதி அரேபியா இடையில் 2 ஆயிரம் கோடி டாலர் அளவில் புதிய ஒப்பந்தம்
இஸ்லமாபாத்:
சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத் இருநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று பாகிஸ்தான் வந்தார்.
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சவுதி அரேபியா சென்றிருந்தார். அவரது அழைப்பின் பேரில் இஸ்லாமாபாத் வந்துள்ள சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது...
கர்ப்பபையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள எஸ்ஸெக்ஸ் நகரை சேர்ந்தவர் பீதன் சிம்சன் (வயது 26). 5 மாத கர்ப்பிணி.
இவர் கடந்த மாதம் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதனையின்போது அவரது கர்ப்பபையில் இருந்த கருக்குழந்தை முதுகுத்தண்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த முதுகுத்தண்டு பிரச்சினையோடு...
இன்று முதல் கொழும்பிலுள்ள தாமரை கோபுரம் பொதுமக்கள் பார்வையிட திறப்பு …
கொழும்பு, செப். 15 -
கொழும்பிலுள்ள தாமரை கோபுரத்தினை பொதுமக்கள் இன்று முதல் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கி அதனை அந்நாட்டு அரசு திறந்து உள்ளது.
இன்று முதல் இலங்கை நாட்டு மக்கள் அனைவரும் தாமரை கோபுரத்தினை காண்பதற்கு அம்மயத்தில் உள்ள தரை தளத்தில் அனுமதி சீட்டினை பெற்று பார்வையிட முடியும்....






















