எகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
கெய்ரோ:
எகிப்து நாட்டின் மூத்த அரசு வக்கீலாக இருந்து வந்தவர் காசிம் பராகாத். இவர் பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி, எண்ணற்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி தலைநகர் கெய்ரோவில் காசிம் பராகாத் சென்று கொண்டிருந்த கார்...
சவுதி தூதரக அதிகாரியை கொன்றவருக்கு வங்காளதேசத்தில் மரண தண்டனை நிறைவேற்றம்
டாக்கா:
வங்காளதேசம் நாட்டுக்கான சவுதி அரேபியா தூதரகத்தில் பணியாற்றி வந்தவர் கலாப் அல் அலி(45). வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள குல்ஷான் பகுதியில் கடந்த 6-3-2012 அன்று ஒரு கும்பலால் கலாப் அல் அலி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 5...
அமெரிக்க தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு-5 பேர் பரிதாப பலி
சிகாகோ:
அமெரிக்காவின் சிகாகோ அருகே அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
ஜனநாயக நாடான அமெரிக்காவில் குடிமக்கள் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்க அந்த நாட்டு அரசியல் சாசனம் அனுமதி அளித்து உள்ளது. இதனால் அங்கு...
சவுதி அரேபியா இளவரசி அமெரிக்காவுக்கான புதிய தூதராக நியமனம்
ரியாத்:
இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த வாகன ஓட்டும் உரிமை சமீபத்தில் அளிக்கப்பட்டது. இருப்பினும், பொது இடங்களில் பெண்கள் பழகுவதற்கென விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளன.
இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டுக்கான தூதராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை...
அமைதிக்கான நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை-இம்ரான் கான் அறிவிப்பு
இஸ்லாமாபாத்:
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர்தப்பினார். அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அபிநந்தன் போர் கைதியாக...
சாண்ட்விச் திருடியதாக குற்றச்சாட்டு: பதவியை ராஜினாமா செய்த ஸ்லோவேனிய எம்பி
லியுப்லியானா:
ஸ்லோவேனியாவின் ஆளுங்கட்சியான எல்எம்எஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தரிஜ் கிரஜ்சிச் (வயது 54). இவர் சமீபத்தில் லியூப்லியானா நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு சாண்ட்விச் வாங்க சென்றுள்ளார். அப்போது சிறிது நேரத்தில் அங்கிருந்த சாண்ட்விச் ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.
அவர் சாண்ட்விச்சை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது....
மெக்சிகோவில் விமான விபத்தில் 2 பேர் பரிதாப பலி
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அதிசாபன் டி ஸரகோசா நகர் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை இந்த பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக...
கர்ப்பபையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள எஸ்ஸெக்ஸ் நகரை சேர்ந்தவர் பீதன் சிம்சன் (வயது 26). 5 மாத கர்ப்பிணி.
இவர் கடந்த மாதம் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதனையின்போது அவரது கர்ப்பபையில் இருந்த கருக்குழந்தை முதுகுத்தண்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த முதுகுத்தண்டு பிரச்சினையோடு...
இந்தியாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது-பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி சொல்கிறார்
இஸ்லாமாபாத்:
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி துணை ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி தற்கொலைத் தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு...
துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி-1,112 பேரை கைது செய்ய உத்தரவு
அங்காரா:
துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் அதிபர் அந்த புரட்சியை முறியடித்தார்.
அமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் தான், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப்...



















