சிரியாவில் பொதுமக்களை பலி வாங்கிய இரட்டைக் குண்டுவெடிப்பு- ஐநா சபை கடும் கண்டனம்
நியூயார்க்:
சிரியாவில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப் போரில் பொதுமக்கள் பலியாவது தொடர்கிறது. கடந்த திங்கட்கிழமையன்று இட்லிப் நகரின் அருகே உள்ள அல்குசார் பகுதியில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் பலத்த காயங்களுடன்...
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்-9 பேர் பலி
லாகோஸ்:
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் நைஜீரியாவின் பனி யாட் வடகிழக்குப் பகுதியில்...
பாகிஸ்தான்-சவுதி அரேபியா இடையில் 2 ஆயிரம் கோடி டாலர் அளவில் புதிய ஒப்பந்தம்
இஸ்லமாபாத்:
சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத் இருநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று பாகிஸ்தான் வந்தார்.
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சவுதி அரேபியா சென்றிருந்தார். அவரது அழைப்பின் பேரில் இஸ்லாமாபாத் வந்துள்ள சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது...
சிரியாவில் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதலில் 33 ராணுவ வீரர்கள் பலி
பெய்ரூட்:
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் வசம் இருந்த பகுதிகள் அரசு படையினரால் மீட்கப்பட்டு வருகிறது. இட்லிப் பகுதியில் ஹமா மற்றும் அலெப்போவின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் ஹயாத் தாகிர் அல்- ஷாம் என்ற பயங்கரவாத அமைப்பின் பிடியில் உள்ளன.
ஹயாத் தாகிர்...
உலகளாவிய நுகர்வோர் நம்பகத்தன்மையில் இந்தியா முதலிடம்
சிங்கப்பூர்:
உலகளாவிய நுகர்வோர் நம்பகத்தன்மை தொடர்பாக சமீபத்தில் நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலமாக 64 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 32000க்கும் மேற்பட்ட மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த வாக்கெடுப்பு ஒரு நாட்டின் வேலைவாய்ப்பு, மக்களின் தனிப்பட்ட நிதி நிலைமை ஆகியவற்றை...
பிரசார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பரிதாப பலி
அபுஜா:
நைஜீரியா அதிபராக பதவி வகித்து வரும் முகமது புஹாரியின் 4 ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, நைஜீரியாவுக்கு வருகிற சனிக்கிழமை பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில் புஹாரி மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக முக்கிய போட்டியாளராக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், நைஜீரியா முன்னாள் துணை அதிபர்...
பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்கியது உண்மை: மசூத் அசார் தம்பி ஒப்புதல்
லாகூர்:
இந்திய ராணுவ வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்கியது. அதை பாகிஸ்தான் மறுத்தது.
ஆனால் இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்கியது உண்மை என ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின்...
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட சிறப்பு அரசாணை ..
இலங்கை, செப். 05 -
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பு அரசாணையை வெளியிட்டார். அவ்வாணையில் மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெட்ரோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், சுகாதார சேவைகள் ஆகியன நேற்று முன் தினம் முதல் அமலுக்கு வரும் வகையில் அவைகளை...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிசை சிறந்த போட்டியாளர்- டிரம்ப்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி டிரம்ப் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது...
பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடக்கம்
இஸ்லாமாபாத்:
புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு இடையிலான பூசல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்பில் இவ்விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பதை அறிந்துகொள்ள உலக நாடுகள் ஆவலுடன் உள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’...























