ஏமனில் ஏவுகணை தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் பலி
சனா:
ஏமனில் அரசுப்படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 4 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாட்டு கூட்டுப்படைகள் அங்கு வான்தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் சாடா மாகாணத்தில் சவுதி அரேபியாவின் எல்லையையொட்டி உள்ள அல்-புக்கா நகரில் ராணுவ...
ஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தின் மீது தலிபான் தாக்குதல் – 40 பேர் பலி
காபுல்:
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் ஷொராப் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் தலிபான் பயங்கரவாதிகள் இன்று நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.
இந்த தாக்குதலில் ராணுவ தளத்தில் இருந்த 40 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம்...
ஈரான்: நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
டெஹ்ரான்:
ஈரான் நாட்டு தலைநகரான டெஹ்ரான் - கோம் நெடுஞ்சாலை வழியாக இன்று சுமார் 50 பயணிகளுடன் வந்த ஒரு பஸ், கெர்மான் நகரின் மத்திய பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடி, சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும்,...
ஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பரிதாப பலி?
ஹராரே :
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. இதில் தலைநகர் ஹராரேயில் இருந்து 145 கி.மீ. தொலைவில் உள்ள கடோமா நகருக்கு அருகே உள்ள 2 சுரங்கங்கள் நீண்ட காலமாக பயன்பாடின்றி கிடக்கின்றன.
இந்த சுரங்கங்களில் சமீபத்தில் சட்ட விரோதமாக நுழைந்த சிலர் தங்க...
இஸ்ரேலில் ஈரானுக்கு உளவு பார்த்த முன்னாள் மந்திரிக்கு 11 ஆண்டு சிறை
ஜெருசலேம்:
இஸ்ரேலில், கடந்த 1995-96-ம் ஆண்டில் எரிசக்தித்துறை மந்திரியாக பதவி வகித்தவர் கோனன் செகேவ். இவர் இஸ்ரேலின் முக்கிய எதிரி நாடான ஈரானுக்காக உளவு பார்த்தாக குற்றச்சாட்டு எழுந்தது. 2012-ம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் அந்நாட்டு அதிகாரிகளைச் சந்தித்து, இஸ்ரேல் குறித்த ரகசிய தகவல்களை அவர்...
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்த ரோவர் விண்கலம் 15 ஆண்டுகளுக்கு பின் செயலிழந்தது-நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வாஷிங்டன்:
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கடந்த 2003ம் ஆண்டு ஆபர்ச்சுனிட்டி என்ற ரோவரை டெல்டா 2 ராக்கெட் மூலம் அனுப்பியது.
இதையடுத்து லேசர் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து, ஆபர்ச்சுனிட்டி...
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்-9 பேர் பலி
லாகோஸ்:
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் நைஜீரியாவின் பனி யாட் வடகிழக்குப் பகுதியில்...
பின்லேடன் மகன் ஹம்ஸா பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது ஐ.நா. சபை
நியூயார்க்:
அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த பின்லேடன் 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு பழி வாங்கும் வகையில் அமெரிக்கா மீதும், அதன் நட்பு நாடுகள் மீதும் தாக்குதல் நடத்துவேன் என அவரது இளைய மகன் ஹம்ஸா பின்லேடன் 2015-ம் ஆண்டில் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து...
சிரியாவில் பொதுமக்களை பலி வாங்கிய இரட்டைக் குண்டுவெடிப்பு- ஐநா சபை கடும் கண்டனம்
நியூயார்க்:
சிரியாவில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப் போரில் பொதுமக்கள் பலியாவது தொடர்கிறது. கடந்த திங்கட்கிழமையன்று இட்லிப் நகரின் அருகே உள்ள அல்குசார் பகுதியில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் பலத்த காயங்களுடன்...
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழல் நிலவுகிறது-டிரம்ப் விளக்கம்
வாஷிங்டன்:
காஷ்மீரில் துணை ராணுவப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்தார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள டிரம்பின் அலுவலகத்தில் அவரிடம் பேட்டி கண்ட செய்தியாளர்கள், காஷ்மீர் தாக்குதலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினர்....



















