அபிநந்தனால் குறி தவறாமல் சுட்டு வீழ்த்தப்பட்ட எப்-16
புதுடெல்லி:
பாகிஸ்தானில் உள்ள பலாகோட் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் ராணுவம் கடந்த புதன்கிழமை இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றது.
காஷ்மீரில் ரஜோரி ராணுவ முகாமை தகர்ப்பதற்காக பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த மூன்று எப்.16 வகை விமானங்கள்...
மகாத்மா காந்தி தேசிய கல்வி மற்றும் திறன் பயிற்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மத்திய கல்வி மற்றும் திறன்...
மகாத்மா காந்தி தேசிய கல்வி மற்றும் திறன் பயிற்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தொடங்கி வைத்தார். துடிப்புமிக்க இளைஞர்களுக்கு கள அளவில் பயிற்சி அளிப்பதை இந்த இரண்டு வருட திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
ஐஐஎம்...
உபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு
மும்பை:
மத்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரித் தொகையை அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி நிர்வாகத்துக்கும் இடையே கடந்த ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி தனது வருவாயில் 75 சதவீதம் தொகையை அரசுக்கு அளித்திருந்தது. இப்படி...
8-வது நாளாக எல்லைப்பகுதிகளில் பாக்.படைகள் துப்பாக்கிச் சூடு – கிராம மக்கள் காயம்
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும் குண்டு வீச்சை பாகிஸ்தான் தொடர்ந்தது. இந்திய நிலைகளையும், குடியிருப்புகளையும் குறிவைத்து இந்த தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் பீரங்கி குண்டுகளையும், சிறிய ரக ஆயுதங்களையும் பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தினர். எல்லை கட்டுப்பாட்டு கோடுப்பகுதியில் உள்ள கிருஷ்ணா காதி செக்டாரில்...
தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றம்: நிதின்கட்கரி தகவல்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய நெடுஞ்சாலைகளில், மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.
அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
உச்சநீதிமன்றம் கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி 500 மீட்டர் தூரத்தில் உள்ள மதுக்கடைகள், உள்ளாட்சி அமைப்புகளில் 20,000 மக்கள் தொகை உள்ள பகுதியாக இருந்தால் 220 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என கூறியிருந்தது.
அதன்படி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. மேலும், மோட்டார் வாகன சட்டத்தின் 185வது பிரிவின் கீழ் குடிபோதையில் வாகனம் ஓட்டினால், சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுகிறது. அதோடு, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வையும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மேற்கொள்கிறது.
மதுக்கடைகள் மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், மதுக்கடைகள் அகற்றப்பட்ட தரவுகளை மத்திய அரசு சேகரிக்கவில்லை.
நவீன பேருந்து நிலையங்கள்:
12வது ஐந்தாண்டு திட்டத்தில் அமல்படுத்த, நவீன பேருந்து நிலையங்கள் உருவாக்கும் திட்டத்தை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. நவீன பேருந்து நிலையங்கள் அமைக்க, இத்திட்டம் நிதியுதவி அளிக்கும். இதற்கான மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் 2018 செப்டம்பரில் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய அளவில் நீர் மேலாண்மையில் தமிழ்நாடு மூன்றாவது இடம் : ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் ...
சென்னை, மார்ச். 29 -.
ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இத்துறையின் சிறப்புக் குழு மாநிலம் வாரியாக நேரில் களஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கு 3 விருதுகளும், சிறந்த மாநகராட்சி,...
அரசு நூலகம் அமைப்பதற்காக ரூ.3 கோடி மதிப்பிலான வீட்டின் சொத்து பத்திரம் மற்றும் சாவியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம்...
புதுச்சேரி, பிப். 23 -
புதுச்சேரி மாநில திமுக முன்னாள் எம்.பி.,யும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சி.பி. திருநாவுக்கரசுவின் உடன் பிறந்த சகோதரி தில்லி என்கிற சரோஜினி என்பவர் தமது கணவர் சுப்ரமணி என்பவருடன் புதுச்சேரி சாரதி நகர் 2–வது குறுக்குத் தெரு, எண்–6 என்ற முகவரியில் சொந்த...
அதிகம் மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு தலை வாழை இலைப் போட்டு விருந்து வைத்த திருபுவனை காவல்...
புதுச்சேரி, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
+2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளை புதுச்சேரி திருபுவனை காவல் நிலையம் அழைத்து அவர்களுக்கு தலை வாழை இலை போட்டு அதில் உணவுப் பறிமாரி கால்துறையினர் விருந்தளித்தனர். அச்சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை...
பாதுகாப்பு தொடர்புடைய மையப்பொருள் அடிப்படையிலான திரைப்படங்களுக்கு தடையில்லா சான்றிதழ்கள் … பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட்
சென்னை, பிப். 12 -
பாதுகாப்பு தொடர்புடைய மையப்பொருள் அடிப்படையிலான திரைப்படங்கள் தயாரிக்க தடையில்லா சான்றிதழ்கள் கோரி, திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து, 2021 ஜனவரி 1 முதல் 2022 ஜனவரி 31 வரை மொத்தம் 18 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 11 முழு நீள கதைப்படங்களுக்கானவை, 7 ஆவணப்படங்கள்...
புதிய தொழில் முனைவோருடன் நாளை பிரதமர் கலந்துரையாடவுள்ளார்… ஆறு மையப் பொருள்கள் குறித்து பிரதமர் முன்னிலையில் அவர்கள் விளக்கம்...
டெல்லி, ஜன. 14 -
புதிய தொழில் முனைவோருடன் பிரதமர் நரேந்திர மோடி 2022 ஜனவரி 15 நாளை காலை 10,30 மணிக்கு காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வேளாண்மை, சுகாதாரம், நிறுவன நடைமுறைகள், வின்வெளி, தொழில்துறை 4.0, ஃபின்டெக், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு...




















