சென்னை, ஜூலை 28 –

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியிலும் வேலை வாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத் தக்கப் பங்கினை வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் கோவிட் பெருந்தொற்று மற்றும் பல்வேறு பொருளாதாரக் காரணங்களால் பாதிக்கப் பட்டு மிகவும் கடினமான சூழலை எதிர் கொண்டு வருகிறது. இதனை அறிந்து தமிழக அரசு கடந்த ஜூன் 26 அன்று ஆளுநர் உரையில் நலிவுற்ற குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கான தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுனர்கள் அரசு அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தது.

  அதன் படி குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்புதற்கான குழுவினை ஒய்வுப் பெற்ற முன்னாள் தொழில்துறைச் செயலாளர் முனைவர் ந.சுந்தரத்தேவன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமையில் ஒருகுழுவை இன்று ஜூலை 28 அமைத்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அக்குழுவில் 12 பேர்கொண்ட உறுப்பினர்களும் சேர்ந்து பணியாற்றுவார்கள் என்று அரசு ஆணைக்குறிப்பில் வெளியிட்டுள்ளது இதில் 1)செயலாளர் நிதித்துறை, செயலாளர் தொழில்துறை, 2) செயலாளர் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, 3) தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் ( உறுப்பினர் செயலர் ) 4) தலைவர், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு ஆகிய அலுவலர்கள் அலுவல் சாரா உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5) பேராசிரியர் எம்.விஜயபாஸ்கர் பகுதி நேர உறுப்பினர் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு மற்றும் பேராசிரியர் சென்னை வளர்ச்சி நிறுவனம்,

6) பிந்து ஆனந்த் இந்திய ரிசர்வு வங்கியின்    Financial inclusion, SME Finance Securitization குழுக்களின் முன்னாள் உறுப்பினர், 7) பாலசுப்பிரமணியம் முன்னாள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி ( SIDBI )

8) ஹேமலதா அண்ணாமலை, முன்னாள் தலைமை நிருவாக அதிகாரி ஆம்பியர் வெகிகல்ஸ் மற்றும் முன்னாள் தலைவர் TIE Women, 9) இஸ்ரார் அகமத் மண்டலத் தலைவர் இந்திய ஏற்றுமதி கழகங்கள் கூட்டமைப்பு ( FIEO ) 10 ) அன்புராஜன் , தலைவர் தமிழ்நாடு குறு மற்றும் சிறிய தொழில்கள் சங்கம் ( TANSTIA ) 11 ) ஆனந்த் முன்னாள் பங்குதாரர் எர்னஸ்ட் & யங் மற்றும் பட்டயக் கணக்காளர், இந்திய ரிசர்வ் வங்கியின் Asset Reconstruction companies குழுவின் முன்னாள் உறுப்பினர். ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர் என அரசு ஆணைக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இக்குழு தமிழகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றிலிருந்து நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கு தேவையான உடனடி குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான பரிந்துரைகளை வழங்கும். இக்குழு குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான ஆலோசனை வழங்கும். மேலும் உடகட்டமைப்பு வணிகம் புரிவதை எளிமையாக்குதல் மற்றும் மனித ஆற்றல் தொடர்பாக ஆராயும். மாநிலத்தின் பின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உயர்த்த ஆலோசனை வழங்கவும் இக்குழு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. இக் குழு இப் பணியை முடித்து அரசுக்கு மூன்று மாதங்களுக்குள் அதன் அறிக்கையை அளிக்கும் எனவும் அவ்வாணைக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here