காஞ்சி முத்தமிழ் மையம் ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பயின்ற திருத்தனி ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

திருத்தணி, செப் . 5 –

காஞ்சி முத்தமிழ் மையத்தின் இயக்குனர் முனைவர்.லாரன்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் இந்திய வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் ஐ.ஆ.எஸ் நந்தகுமார்

திருவள்ளுவர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ப.ஆ.ஆறுமுகம்,  கல்வியாளர் சங்கமத்தின் நிறுவனர் சிகரம் சதீஷ், ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர்.

இவ்விழாவில் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக சிறப்பாக பணியாற்றி வரும் காஞ்சிபுரம் ஒன்றியம் மற்றும் நகராட்சி பள்ளிகளை சார்ந்த அங்கம்பாக்கம் அறிவியல் ஆசிரியர் சேகர், காவாந்தண்டலம் பள்ளி ஆசிரியர் சரவணன், மேட்டுக்குப்பம் பள்ளி ஆங்கில ஆசிரியர் இளங்கோவன், மாவட்ட ஆட்சியர் காலனி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஜெபநேசன், குருவிமலை பள்ளி ஆசிரியர் ராம்பிரசாத்,   மேல்பிள்ளையார் பாளையம் கணித ஆசிரியர் கவிதா ஆகியோருக்கு டாக்டர்.ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் பெருந்தகை விருது வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here