செய்தி சேகரிப்பு வினோத் கண்ணன்

சென்னை, ஆக.19-

திரைப் படம் ஒன்றில்  வெட்டப் படாத கிணற்றை காணவில்லையென நகைச்சுவை நடிகர் வடிவேலு அரசு அலுவலர்களிடம் கிணற்றை கண்டுப் பிடித்து தருமாறு புகார் அளிப்பார். ஆனால் தற்போது நிஜத்திலயே லே அவுட் வரைப்படத்தில் அரசால் அனுமதிப் பெற்று உருவான நகருக்கு சொந்தமான சாலையையே தனிநபர் சாப்பிட்டு ஜீரணிக்க நினைக்கும் கொடுமை மடிப்பாக்கம் பகுதியில் அரங்கேறிவுள்ளது. அது குறித்து அப்பகுதி மக்கள் காணாமல் போன எங்கள் சாலையை மீட்டுத் தரும் படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மடிப்பாக்கத்தில் உள்ள பாகீரதி, மற்றும் ஸ்ரீநிவாச நகர் இதற்கான லே அவுட் 1973 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு அரசின் அனுமதிப் பெற்று உருவான நகர் ஆகும். இதில் தற்போது 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந் நகரில் வசித்து வருகின்றனர்.

அதில் பாகீரிதி நகருக்கு மடிப்பாக்கம் பஜார் சாலையில் இருந்து ஜே.கே சாலை வழிப்பாதை அப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்காக ஆவனத்திலும் லே அவுட்டிலும் வரையறுக்கப் பட்டு விற்பனை செய்யப் பட்டுள்ளது. அப் பகுதியில் 1973 முதல் குடியிருப்பு வாசிகள் குடியேறி வந்த நிலையில் அந்த சாலையும் பயன் பாட்டில் இருந்து உள்ளது. இந் நிலையில் திடீரென தனியார் ஒருவர் அச்சாலை தனக்கு சொந்தமான பட்டா நிலம் எனக்கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பஜார் சாலையில் இருந்து ஜே.கே., சாலை செல்லும் பிரதான வழித்தடத்தை பட்டா இடம் என்று கூறி தடுப்பு சுவர் அமைக்கப் பட்டது தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்து உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றி கொடுத்தனர். அடுத்த சில மாதங்களில் மீண்டும் அந்த வழித்தடம் அடைக்கப்பட்டு தனிநபர் ஆக்கிரமிப்பு தொடர்ந்து வருகிறது.

அன்று முதல் அச்சாலையை மீட்டெடுக்க தொடர்ந்து போராடி வரும் பகுதி மக்கள்,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், சாலை இருந்ததற்கான ஆதாரங்களை சேகரித்தனர். அடுத்த கட்டமாக, சோழிங்க நல்லுார் வட்டாட்சியரிடம் முறையிட்டனர். சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப் பாளர்களுக்கு வருவாய் துறை வாயிலாக  நோட்டீஸ் வழங்கப்பட்டு. அதன் பிறகும் இப்பிரச்சனை கிடப்பிலயே உள்ளது.

இந் நிலையில், பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகள் சார்பில் நேற்று முன்தினம்  வழித் தடத்தை காணவில்லை அதனை மீட்டுத் தரும்படி மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here