காஞ்சிபுரம் : தினசரி கோயில் பிரசாதத்தை கேட்டு வாங்கி சாப்பிடும் காகம்…
காஞ்சிபுரம், ஆக. 08 -
காஞ்சிபுரம் வந்தவாசி நெடுஞ்சாலையில் உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.
https://youtu.be/f0r1wBajjBI
இத்திருக்கோயிலில் நட்சத்திர விருட்ச விநாயகர், ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்கிற பிரகஸ்பதி, சனீஸ்வர பகவான்,...
கும்பகோணம் : 46 திருக்கோயில்களில் பணியாற்றும் 250 அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா...
கும்பகோணம், ஜன. 11 -
கும்பகோணத்தில் இன்று இந்து சமயம் அறநிலையத்துறை சார்பில் 46 திருக்கோயில்களில் பணியாற்றும் 250 அச்சகர்கர் மற்றும் பணியாளர்களு பொங்கல் திருநாளை முன்னிட்டு புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் இந்து சமயம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பணி...
கன்னிகைப்பேர் ஸ்ரீஅழகியசுந்தரராஜபெருமாள் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் : 12 ஆண்டுகளுக்கு பிறகு மிகச்சிறப்பாக நடைப்பெற்றது ..
பெரியபாளையம், மார்ச். 18 -
பெரியபாளையம் அடுத்துள்ள கன்னிகைப்பேர் ஸ்ரீஅழகியசுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீஅழகியசுந்தரவல்லிதாயார் சமேத ஸ்ரீ அழகியசுந்தரராஜபெருமாள்திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு கடந்த 2010-ம் ஆண்டு...
ஆரூத்ரா தரிசனத்தை முன்னிட்டு 11 திருக்கோயில்களில் இருந்து வந்து, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் முன்பு அருள் பாலித்த...
கும்பகோணம், ஜன. 06 -
கும்பகோணத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆதி கும்பேஸ்வரன் கோவில் முன்பு 11 சிவாலயத்தில் இருந்து நடராஜர் சிவகாமி அம்பாள் சுவாமிகள் ஒரே இடத்தில் ஒன்று சேர நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அன்றைய தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் கும்பகோணத்தில், மகாமகம்...
தென்காலஹஸ்தி என அழைக்கப்படும் திருபாம்புரம் ஸ்ரீசேஷபுரீஸ்வரர் சிவாலயத்தில் மகா சிவராத்திரி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர், பிப். 19 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா திருபாம்புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசேஷபுரிஸ்வரர் சிவாலயம் தென்காலஹஸ்தி என பக்தர்களால் போற்றப்படும் புராதன சிறப்புமிக்க ஸ்தலமாகும்.
மேலும், இவ்வாலயம் குறித்து அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் தேவாரப் பதிகங்களில் இவ்வாலய சிறப்பினை பாடியுள்ளனர் மேலும், நவகிரகங்களின் ராகுவும் கேதுவும்...
வெகு சிறப்பாக நடைப்பெற்ற கும்பகோணம் சக்கரபாணி சுவாமி திருக்கோயில் வைகாசி பௌர்ணமி தெப்போற்சவ விழா ..
கும்பகோணம், ஜூன். 15 -
கும்பகோணம் சக்கரபாணிசுவாமி திருக்கோயிலில், சுழலும் சுதர்சன சக்கரத்துடன், சக்கரபாணி சுவாமி விஜயவல்லி மற்றும் சுதர்சனவல்லி தாயாருடன் எழுந்தருள, வைகாசி பௌர்ணமி தெப்போற்சவம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/TfDBkt4-YTg
காவிரி தென்கரையில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம்...
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற அருணகிரிநாதர் அவதார திருநாள் விழாவில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் ..
திருவண்ணாமலை. ஜூலை.15 -
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற அருளாளர் அருணகிரிநாதர் அவதாரத் திருநாள் விழாவையொட்டி உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் பிறந்த அருணகிரிநாதர், தனது தீய செயல்களால் மனம் வருந்தி திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அப்போது அவரை...
சங்கேந்தி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவீரமாகாளியம்மன் கூத்த பெருமாள் ஆலய சித்திரை தீ மிதி திருவிழா …
முத்துப்பேட்டை, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகபதி ...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகா, சங்கேந்தி ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கூத்த பெருமாள் ஆலய 8 நாள் சித்திரைத் திருவிழா இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைப்பெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்றே இவ்வாண்டிற்கான...
ஓலைச் சப்பரத்தில் வீதிவுலா வந்த கும்பகோணம் கோடீஸ்வர சுவாமி திருக்கோயில் நாகேஸ்வரன் சுவாமிகள் …
கும்பகோணம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் நாகேஸ்வரன் திருக்கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா 4 ஆம் நாளான சுவாமிகள் ஓலைச்சப்பரத்தில் வீதியுலா வந்த நிழச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான கொட்டையூர்...
உத்தண்டிகண்டிகையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா…
பொன்னேரி, ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது உத்தண்டிகண்டிகை கிராமம், மேலும் இக்கிராமத்தில் அமைந்துள்ள வெகு பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழா இன்று நான்கு யாக கால பூஜைகளுடன் நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்...























