சென்னை, டிச. 18 –
கல்லூரி மாணவியர் இருவருக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்த பேராசியரை பள்ளிக்கரணை காவல் நிலைய போலீசார் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பள்ளிகாரணை அடுத்த ஜல்லடியன்பேட்டையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஹோட்டல் மேனஜ்மென்ட் 3ம் ஆண்டு படித்து வரும் இரு மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கல்லூரி பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் என்பவர் மீது கடந்த 6ம் தேதி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
கல்லூரி நிர்வாகம் மாணவிகள் கொடுத்த புகாரை அலட்சியப்படுத்தி பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்து, நிர்வாகத்திடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு, பல மணி நேரமாக மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், தகவல் அறிந்த பள்ளிகாரணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அனைவரையும் கலையும் படியும், முறையாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் படியும் அறிவுறுத்தியதின் பேரில் மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளிகாரணை காவல் நிலையத்தில் பாலியல் தொந்தரவு தொடர்பான புகாரை அளித்தனர்.
அவர்கள் கொடுத்த புகாரை தொடர்ந்து பேராசிரியர் ஆபிரகாம் அலெக்சை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். போலீசாரின் விசாரணையில் பலியல் வன்புணர்வ்வை தூண்டும் வகையில் மாணவிகளிடம் கல்லூரி பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் நடந்து கொண்டதாக தெரியவந்ததாக கூறிய பள்ளிகாரணை போலீசார் ஆபிரகாம் அலெக்ஸ் மீது 354(!)(!!), r/w இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் பேராசிரியர் ஆபிரகாம் அலெக்சை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.