Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாகிஸ்தானில் மனரீதியாக துன்புறுத்தப்பட்டாரா அபிநந்தன்? -புதிய தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நேற்றிரவு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார். இன்று காலை விங் கமாண்டர் அபிநந்தன் விமானப்படை தளபதி தனோவாவை சந்தித்து பாகிஸ்தானில் தனக்கு நேர்ந்தது பற்றி விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து, டெல்லி ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைக்காக ...

துப்புரவு தொழிலாளர்களின் பாதத்தை கழுவியது ஏன்? – பிரதமர் மோடி விளக்கம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. தொண்டர்களுடன் நேற்று கலந்துரையாடினார். உலகின் மிகப்பெரிய காணொலி காட்சியாக கருதப்படும் இந்நிகழ்ச்சியில் தொண்டர்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளித்தார். அப்போது மராட்டிய மாநிலம் புனே நகரை சேர்ந்த தொண்டர் எழுப்பிய கேள்விக்கு...

அபினந்தனை வரவேற்க வாகா எல்லையில் திரண்ட பொதுமக்கள்

புதுடெல்லி: எல்லையில் நடந்த தாக்குதலின்போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் சிறைப்பிடித்தது. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, போர்க் கைதியாக பிடிபட்டுள்ள அபினந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. மேலும் அபினந்தனை விடுவிப்பதற்காக ராஜாங்கரீதியாகவும் தீவிர முயற்சி மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள...

பாராளுமன்ற தேர்தல்: பஞ்சாப் மாநிலத்தில் 7-ம் தேதி ராகுல் பிரச்சாரம்

மோகா: பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. மோகா- லூதியானா நெடுஞ்சாலையில் உள்ள கில்லி சாஹ்லான் கிராமத்தில் இருந்து பிரச்சாரம் துவங்குகிறது என பஞ்சாப் மாநில...

பாராளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் – தேர்தல் ஆணையம் உறுதி

புதுடெல்லி: பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருகிறார். தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாரான நிலையில் எல்லையில் பதட்டமான நிலை நேரிட்டது. புல்வாமா தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாத...

8-வது நாளாக எல்லைப்பகுதிகளில் பாக்.படைகள் துப்பாக்கிச் சூடு – கிராம மக்கள் காயம்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும் குண்டு வீச்சை பாகிஸ்தான் தொடர்ந்தது. இந்திய நிலைகளையும், குடியிருப்புகளையும் குறிவைத்து இந்த தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் பீரங்கி குண்டுகளையும், சிறிய ரக ஆயுதங்களையும் பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தினர். எல்லை கட்டுப்பாட்டு கோடுப்பகுதியில் உள்ள கிருஷ்ணா காதி செக்டாரில்...

நிகோபார் தீவுகளில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

போர்ட் பிளேர்: நிகோபார் தீவுகளில் இன்று காலை 5.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதம் ஏதும் ஏற்பட்டதா? என்ற தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஜனவரி மாதம் அந்தமான் நிகோபார் தீவுகளில் 6 ரிக்டர்...

காஷ்மீர் எல்லையில் இன்றும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்-இந்திய ராணுவம் பதிலடி

ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாத முகாமை தகர்த்ததால் பாகிஸ்தான் கடும் ஆத்திரமடைந்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஜம்மு...

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்-இந்திய விமானிகள் சங்கம்

புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல்களையடுத்து இந்திய விமானிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரவீன் கீர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இந்திய விமானிகள் சங்கத்தின் சார்பில், நாட்டின் மீதான பற்று மற்றும் எங்கள் பொறுப்பினை உணர்ந்து சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் எங்களது முழு ஒத்துழைப்பினையும் அளிப்போம். பயங்கரவாதிகளுக்கு எதிரான...

எதிரிகள் சுற்றி வளைத்தாலும் நெஞ்சுறுதியுடன் நின்ற அபினந்தன்

புதுடெல்லி: இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடித்தபோது இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. இதில் ஒரு விமானம் பாகிஸ்தானுக்குள் விழுந்தது. அதில் இருந்த தமிழகத்தை சேர்ந்த பைலட் அபினந்தன் பாகிஸ்தான் பிடியில் உள்ளார். நேற்று காலை 8.45 மணியளவில் இந்த விமானம் சுடப்பட்டது. இந்திய எல்லையில் இருந்து 7 கிலோ மீட்டர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS