சென்னை, ஏப். 29 –

பிரேசில் நாட்டின் கேசியாஸ் டோசுல் என்ற நகரில் 24 வது கோடைக்கால செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் 2022 போட்டிகள் எதிர்வரும் மே 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

இப்போட்டியில் பங்கேற்க செல்லும் இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஆர்.சினேகா, தடகள வீரங்கனை சமீகா பர்வீன் முஜிப், இறகுப்பந்து வீராங்கனை ஜெர்லின், டென்னிஸ் வீரர் பிரித்வி சேகர், தடகள வீரர்கள் மணிகண்டன் மற்றும் சுதன்ராஜேந்திரன் ஆகிய 6 பேர் இடம் பெற்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள வீர ர்களுடன் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் மூர்த்தி, முதன்மை டென்னிஸ் பயிற்சியாளர் டாக்டர் ஸ்டாலின், நீச்சல் பயிற்சியார் ஸ்ரீதர் ஆகியோரும் பிரேசில் செல்கின்றனர். இப்போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வருகின்ற 29 ஆம் தேதி டெல்லியிலிருந்து புறப்பட்டு பிரேசில் செல்கிறது.

போட்டியில் பங்கேற்க செல்லும் தமிழ்நாடு வீர ர் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கங்கள் வென்று, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கவேண்டும். தமிழ்நாட்டின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பிலும், விளையாட்டு மே ம்பாட்டுத்துறை சார்பிலும் அனைத்து தமிழ்மக்கள் சார்பிலும் விளையாட்டு வீர ர் மற்றும் வீரங்கனைகள் சார்பிலும் வழ்த்துகிறேன் என சுற்றுச்சூழல்,காலநிலைமாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here