சென்னை, அக். 11 –

இன்று சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில்  தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் எதிர்வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கப் பட்ட ஐந்து விதமான இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்தி விற்பனையைத் துவக்கி வைத்தார்.

இதில் காஜூகட்லி எனும் இனிப்பு வகை 250 .கிராம் எடையுள்ளது ரூ. 225 என்றும், நட்டி மில்க் கேக் எனும் இனிப்ப்பு வகை 250 .கிராம் எடையுள்ளது ரூ. 210க்கும், மோத்தி பாக் எனும் இனிப்பு வகை 250 .கிராம் எடையுள்ளது ரூ. 170 க்கும், காஜூ பிஸ்தா எனும் இனிப்பு வகை 250 .கிராம் எடையுள்ளது ரூ. 275 க்கும், காபி மில்க் பர்பி வகையான இனிப்பு 250 .கிராம் எடையுள்ளது ரூ. 210 க்கும், தனித்தனியாகவும், இந்த ஐந்து வகையான இனிப்பு வகைகளை உள்ளடக்கிய தொகுப்பு ரூ. 425 க்கும் விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்து அதனின் அறிமுகம் மற்றும் விற்பனை துவக்க நிகழ்ச்சி நடைப் பெற்றது.

இந்த அறிமுக மற்றும் முதல் விற்பனை துவக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் இன்றைய தினம் நம்முடைய ஆவின் நிறுவனத்தின் சார்பில் நாம் பயன்பாட்டிற்கு போக மீதம் இருக்கின்ற பாலினை உட்பொருட்களாக மாற்றி இது போன்ற பண்டிகை காலங்களில் பொது மக்களுக்கு சேவை செய்கின்ற உணர்வோடு வியாபார நோக்கமின்றி பொது நோக்கோடு இதுப் போன்ற உப பொருட்கள் தயாரித்து அதை மக்களுடைய பயன்பாட்டிற்கு தர வேண்டும் என்ற கொள்கை உணர்வோடு இது ஒரு தொழில் முறை என்றாலும் முழுக்க முழுக்க மக்களுக்காக பொது நோக்கோடு செய்து வருகின்றோம்.

கடந்த ஆண்டு இனிப்பு வகைகளில் 15 டன் விற்பனை செய்யப்பட்டது அதன் மூலம் ரூ.1.2 கோடி அதன் மூலம் இலாபத்தை ஆவின் நிறுவனம் ஈட்டியது. அதைப் போன்று இந்த ஆண்டு அதிக விற்பனை நோக்கத்தோடு 25 டன் இலக்கை நிர்ணயித்து ரூ.2.2 கோடிக்கு இலாபம் ஈட்ட திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை ஆவின் நிறுவனம் எடுத்து வருவதாக குறிப்பிட்டார். மேலும் அனைத்து மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள், மற்றும் அண்டை நாடுகளுக்கும் ஏற்கனவே விற்பனை ஒப்பந்தம் செய்யப் பட்டதின் அடிப்படையில் இந்தப் பொருட்களை எல்லாம் விற்பனை செய்ய துரித நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஆவின் நிறுவனம் இந்த செயலை செய்வதில் எந்தவித வியாபார நோக்கங்கள் கொண்டதில்லை ஆனால் தனியார், கொள்முதல் விலை ரூ. 25 முதல் ரூ. 28 வரை  எந்த விலைக்கு பாலினை வாங்க முடியுமோ அந்த அளவிற்கு வாங்குகின்றனர். ஆனால் ஆவின் நிறுவனத்தை பொருத்தவரை லிட்டருக்கு ரூ. 32 கொடுத்து வாங்குகின்றோம். லிட்டர் 32 க்கு வாங்குவதை 12 லிட்டர் பாலை பிராஸஸிங் செய்வதின் மூலம் 1 கிலோ பால் பவுடர்தான் கிடைக்கும். அதில் கூடுதலாக ஒரு பலன் என்னவென்றால் ரூ. 140 க்கு வெண்ணை அதிலிருந்து கிடைக்கும் . ஆனாலும் ஆவினுக்கு ஏற்படக்கூடிய நட்டம் ரு. 34 , அவையின்றி பிராஸஸிங் செய்வதற்கான செலவினத்தை சேர்த்தால் மொத்தமாக ரூ. 40 நட்டம்தான். இருப்பினும் உற்பத்தி செய்கின்ற விவசாயிகள் கொரோனா காலமாக இருந்தாலும், தன்னைத்தானே வருத்திக் கொண்டு மழை வெயிலென பார்க்காமல் அந்த கால்நடைகளையும் பராமரித்துக் கொண்டு தனது குடும்பத்தையும் காத்திட உழைத்து வருகின்றனர். அதனால் அவர்களின் நலன் கருதியே ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை, அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தமிழக மக்களுக்கும் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் நல்ல தரமான பால் மற்றும் பால் பொருட்களை விநியோகம் செய்வதற்கு பல முயற்சிகளை எடுத்து வருவதாகவும் மேலும் எதிர் கலாத்தில் இதேப் போன்று ஆவினில் பல முன்னேற்றமான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என தெரிவித்தார்.

அதைப்போன்று ஆவின் மேலாண்மை இயக்குநர் குறிப்பிடுகையில் இந்த முறை ஆவின் மூலமாக விற்பனை செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் சில மாற்றத்துடன் அதிக நுகர்வோர்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டுவுள்ளோர் என்றும் குறைந்த து 50 சதவீதம் கூடுதல் விற்பனை செய்வதற்கான இலக்கை இந்த ஆண்டு அடைய முயன்று வருகின்றோம் என்றார்.

இந் நிகழ்ச்சியில் ஆவின் இணை நிர்வாக இயக்குநர் நா.முருகேசன், பொது மேலாளர் விற்பனை ஆர்.எஆஃ. புகழேந்தி, ஆணையர் அலுவலக உதவி ஆணையர் சந்திரசேகரன் மற்றும் ஆவின் அலுவலர்கள் மற்றும் பணயாளர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here