கலசபாக்கம் ஜூலை.18- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாசில்தாராக ஜெகதீசன் பொறுப்பேற்றுக் கொண்டார். கலசபாக்கம் தாசில்தாராக பணியாற்றி வந்த கே.அமுல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் அகதிகள் நலன் தனிதாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஜெகதீசன் கலசபாக்கம் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய தாசில்தாராக ஜெகதீசன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மண்டல துணை தாசில்தார்கள் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here