துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28-ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
சென்னை:
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வரும் 27-ஆம் தேதி அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஏழு பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி அளித்துள்ளது.
ஜெ.மரணம் குறித்து விசாரிக்க...
லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரை கிளை
சென்னை:
லஞ்சம் தொடர்பான வழக்கின் விசாரணை ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும், சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். லஞ்சம் வாங்குவோர்...
கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை-பிரேமலதா
சென்னை:
விஜயகாந்திடம் இன்று ரஜினி உடல் நலம் விசாரித்து சென்ற பிறகு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதில் எந்தவித இழுபறியும் இல்லை. எனவே விரைவில் தொகுதி பங்கீடு பற்றிய தகவல்கள் வெளிவரும்.
தமிழகத்தில் தே.மு.தி.க.வுக்கு உள்ள வாக்கு வங்கி...
விஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது-ரஜினிகாந்த்
சென்னை:
உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சுமார் 2 மாத காலம் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார். வீட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வரும் விஜயகாந்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி...
ரஜினி ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்-கமல்ஹாசன்
ஆலந்தூர்:
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திருச்சியில் இருந்து இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
நான் மக்களை நேரடியாக சந்திக்கும்போது அவர்கள் அமைதியாக என்னுடைய கருத்துக்களை கேட்டார்கள். கை தட்டி ஆர்ப்பரிக்காமல் யோசிக்க ஆரம்பித்தார்கள். அது நன்றாகவும் மனதுக்கு இதகமாகவும்...
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருட்டு
ஆலந்தூர்:
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இவர் கடந்த 17-ந்தேதி காலை 8.10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் திருச்சியில் இருந்து சென்னை வந்தார். அப்போது அவருடைய செல்போன் திடீரென மாயமாகி இருந்தது.
வீட்டிற்கு சென்ற பின்பே செல்போன் திருடு போய் இருப்பது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு...
திருவான்மியூரில் நாளை ப.சிதம்பரம் பேசுகிறார்
சென்னை:
காங்கிரஸ் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாளை (22-ந் தேதி) மாலை 6 மணிக்கு திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் நடக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்குகிறார். முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் வரவேற்கிறார்....
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணியிடம் 72 பவுன் நகை கொள்ளை
சென்னை:
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி விசால லட்சுமி(வயது 37). இவர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவில்பட்டி சென்றிருந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை நோக்கி புறப்பட்டார். ரெயில் நேற்று மாம்பலம் ரெயில் நிலையம் அருகே...
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தூர்வாரும் பணிகள்-எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டி பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்.
சென்னை-தண்டையார்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் அருகில் நேரு நகர் மற்றும் எழில் நகர் பகுதிகளை இணைக்க வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில்...
தியாகராயநகரில் மாநகர பஸ் மோதி சிறுவன் பலி
சென்னை:
சென்னை தியாகராய நகரில் இருந்து மாநகர பஸ் முகப்பேருக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் சங்கர் ஓட்டிச் சென்றார். தி.நகர் தணிகாசலம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்த 8 வயது சிறுவன் தருண்ரோஷன் பரிதாபமாக உயிர் இழந்தான்....















