சென்னை, ஜூலை 31 –

முதலமைச்சர் இன்று தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 70.75 இலட்சம் ரூபாய் செலவிலும் மதுரை மாவட்டம் மதுரை இரயில் நிலையம் அருகில் ரூ.86.35 இலட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீர ர்கள் நல அலுவலகத்துடன் கூடிய மையக்கட்டடங்களைக் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் சுமார் 1,27,000 முன்னாள் படை வீரர்கள் 56,000 கைம்பெண்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் உள்ளனர். அவர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு முன்னாள் படை வீரர் நலத்துறை மூலமாக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் நலன் மற்றும் குறைகளைத் தீர்ப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்துடன் கூடிய மையக் கட்டடம் கட்டிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அவ்வகையில் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நலநிதியிலிருந்து திருநெல்வெலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 3002 சதுர அடியில் ரூ.70.75 இலட்சம் செலவிலும், மதுரை மாவட்டம் மதுரை இரயில் நிலையம் அருகில் 2550 சதுர அடியில் ரூ. 86.35 இலட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகத்துடன் கூடிய மையக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, பொதுத்துறைச் செயலாளர் மரு.டி.ஜகந்நாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here