பொன்னேரி, டிச. 02 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள மெதூர் ஊராட்சி மன்றம் அருகே நேற்றிரவு,  பழவேற்காடு செல்லும் சாலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். என்றத் தகவல்  பொன்னேரி காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது.

அதனையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரணை மற்றும் கள ஆய்வு மேற் கொண்டனர். அப்போது தலைத் துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது..  போலீசாரின் தொடர் விசாரணையில் இரு சக்கர வாகனம் ஒன்றில் 4 பேர் கொண்ட கும்பல் வந்ததாகவும், அதில் இருந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில், அவரை இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே இறக்கி அரிவாளால் வெட்டியதில் தலை தனியாக விழுந்ததாகவும் உடல் தனியாகவும் விழுந்ததாகவும், பின்பு அந்த இளைஞரின் தலையை காலால் எட்டி உதைத்து சாலையில் தள்ளி விட்டு 3 பேர் இரு சக்கர வானத்தில் தப்பி சென்றதாகவும் காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.

காவல் துறையினரின் தொடர் விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நபர் மீஞ்சூரை அடுத்த மௌத்தம்பேடு கிராமத்தை சேர்ந்த ராகேஷ் (26) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் மீஞ்சூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். மேலும் இவர் மீது கொலை, மற்றும் கொலை முயற்சி உள்ளட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

அதனை தொடர்ந்து தலை தனியே துண்டித்து கொலை செய்யப்பட்ட ரவுடியின் சடலத்தை கைப்பற்றிய பொன்னேரி காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்படுக்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here