சென்னை, செப்.5 –

இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரனார் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலை துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப் பட்டுள்ள திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பிலான கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரனார் அவர்களது வாழ்க்கை குறிப்பு மடிப்பேடுகளை அவர் வெளியிட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார். இந் நிகழ்வின் போது செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர் பெருமக்கள், நாடளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர்  மகேசன் காசிராஜன் ஐ.பி.எஸ்., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ஐ.பி.எஸ்., சென்னை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.விஜயராணி ஐ.பி.எஸ்., சென்னை துறைமுக பொறுப்புக்கழகத்தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here