திருவாரூர், செப். 30 –

நெல் மூட்டைகள் திறந்தவெளியில் இருக்கக் கூடாது என்பதனை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருவதாக திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீடற்றவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. இதில் 1168  பயனாளிகளுக்கு ரூ. 11 கோடியே 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்

தேர்தல் சமயத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் தமிழக முதல்வர் நிறைவேற்றுவார். விவசாயிகள் எங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் என கேட்டாலும் அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு அரசு தயாராக உள்ளது. கொள்முதல் செய்வதற்கு தேவையான தளவாட பொருட்கள் அனைத்தும் தேவையான அளவு வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் காத்திருக்கக் கூடாது என்பதற்காகவும், ஒரே சமயத்தில் ஒரே ஊரில் இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு கூட அனுமதி  தரப்பட்டுள்ளது. செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் அதனடிப்படையில் இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 636 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது எனவும் மேலும் 819 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 740 நெல் கொள்முதல் நிலையங்கள்  மட்டும்தான் செயல்பட்டன எனக்குறிப்பிட்டார். மேலும் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் இருக்கக் கூடாது என்பதனை கருத்தில் கொண்டு தமிழக முழுவதும் 11 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்து தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் அப்போது தெரிவித்தார்

பேட்டி : அர.சக்கரபாணி – உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here