திருவண்ணாமலை அக்.21-

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்பவர்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்படுகிறது. இசேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் மட்டுமே நாளை 22 ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் வழி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்த வழி முறைகள், நிரந்தர பட்டாசு சில்லரை விற்பனை உரிமம் கோருபவர்கள் மற்றும் ஆண்டு உரிமம் புதுப்பித்தலுக்கு பொருந்தாது.

பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமல் பாதுகாப்பான இடமாக தேர்வு செய்துள்ள இடத்துக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு உரிமம் பெற்றவர்கள் அதே இடத்தில் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கும் போது ஏற்கனவே வழங்கப் பட்டுள்ள விண்ணப்பத்தையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here