திருவண்ணாமலை அக்.21-

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவுறுத்தலின் பேரில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை வட்டத்தில் வருகிற 23ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம் மாவட்ட தனி துணை ஆட்சியரும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலருமான வெங்கடேசன் தலைமையில் நடந்தது.

இந்த ஆய்வு கூட்டத்தில் தாசில்தார் எஸ்.சுரேஷ் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) சு.அருணாசலம்,  வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புவனேஸ்வரி, வட்டார கல்வி அலுவலர்கள் பவானி ஜோதி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வடடாட்சியர்கள் சாந்தி மஞ்சுநாதன் தேர்தல் துணை வட்டாட்சியர் மோகன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேதுராமன் மற்றும் அனைத்து வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டத்தில் திருவண்ணாமலை வட்டத்திலுள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று பொது மக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விவரம், படிவம் 1 மற்றும் 2 கணக்கெடுப்பு செய்து வழங்குமாறு தெரிவிக்கப் பட்டது. மேலும் திருவண்ணாமலை வட்டத்தில் கோவிட் 19 தடுப்பூசி பெருமளவில் போடுவதற்கு பொது மக்களிடையே அதிகளவில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தல், டிஜிட்டல் பேனர், துண்டு பிரசுரம் செய்தல் போன்றவைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here