பொதுமக்கள் நேரடியாக பங்கேற்கும் ரூ. 300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டம் மற்றும் ரூ. 100 மதிப்பீட்டிலான நகர்ப்புர வேலை வாய்ப்புத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நடைப்பெற்ற அரசு விழாவில் தொடங்கி வைத்தார்

சேலம், டிச. 11 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டம், சீலநாயக்கன் பட்டியில் நடைப்பெற்ற அரசு விழாவில் நமக்குநாமே திட்டம் மற்றும் நகர்புர வேலை வாய்ப்புத்திட்டம் ஆகிய புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.38 கோடியே 53 இலட்சம் மதிப்பீட்டிலான 83 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து ரூ.54 கோடியே 1 இலட்சம் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 30, 837 பயனாளிகள் பயன் பெறும் வகையில் ரூ.168 கோடியே 64 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ரூ. 300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டம்

மக்களின் சுயவுதவி, சுயசார்பு எண்ணம் ஆகியவற்றை வலிமைப்படுத்தவும், பரவலாக்கவும், மக்கள் பங்கேற்புடன் கூடிய நமக்கு நாமே திட்டத்தினை முத்தமிழறிஞர் கலைஞர் 1997 – 98 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார்கள். மக்களின் சுயசார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும் மக்களுக்கு தேவையான திட்ங்களை அவர்களது பங்களிப்புடன் செயல் படுத்தி பொதுச் சொத்துக்களை உருவாக்கி பராமரித்து வருவதே நமக்குநாமே திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும், இத்திட்டம் வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டமிடுதல் தொடங்கி வள ஆதாரங்களை திரட்டுதல், பணிகளை மேற்கொள்ளுதல், மற்றும் மேற்பார்வை செய்தல் என அனைத்திலும் மக்களை நேரடியாக ஈடுப்படுத்துகிறது.

மாநில அளவில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் நமக்குநாமே திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் மேற் கொள்ளப்படும். திட்டப்பணிகளிகளின் மதிப்பீட்டில் குறைந்தப்பட்சம் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின்பங்களிப்பு நிதி மற்றும் அரசு நிதிவுதவியுடன் செயல்படுத்தப்படும்.

ரூ. 100 கோடி மதிப்பீட்டிலான நகரப்புர வேலை வாய்ப்புத்திட்டம்

நகரப்புர ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாநில அளவில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் நகரப்புர வேலை வாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நகரப்புரங்களில் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதாகும். இயற்கை வள மேலாண்மைப் பணிகள், வெள்ளத்தடுப்புப் பணிகள், சுற்றுநூழலைப் பாதுகாத்தல், நகர்புர இடத்தை பசுமைப்படுத்துதல் போன்ற உள் கட்டமைப்புகளை உருவாக்குதல், சமூக மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதின் மூலம் வாழ்வாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பை மேம்படுத்துதல், திறனுக்கேற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், பொது சொத்துக்களை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், பசுமை மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு இயற்கை வள மேலாண்மை தொடர்பான பணிகளை மேற் கொள்வதாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here