பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் முழுவதும் மும்பையில் படமாக்கப்பட உள்ளது. இதற்காக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனிடம் முன்கூட்டியே மொத்த கால்ஷீட்டையும் வாங்கிவிட்டார் முருகதாஸ். இதில் ரஜினி இரண்டு வேடங்களில் நடிப்பதாக சில செய்திகள் வெளியாகின.
இந்த செய்தியை படக்குழு மறுத்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இரண்டு நடிகைகளும் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தில் நயன்தாரா இணைந்தால் நான்காவது முறையாக ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும். ஏற்கனவே சந்திரமுகி, சிவாஜி, குசேலன் ஆகிய படங்களில் ரஜினிகாந்துடன் நயன்தாரா நடித்திருந்தார். சிவாஜியில் பல்லேலக்கா பாடலுக்காக சிறப்புத் தோற்றத்தில் நயன்தாரா நடித்திருந்தார்.