ராமநாதபுரம், ஏப். 20-

சென்னை ஐடி நிறுவனத்தில் பணி புரியும் இன்ஜினியர் நீண்ட நாட்களாக அவதிப் பட்டு வந்த நோயிலிருந்து ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி சிவா பூசாரியின் அருள் வாக்கால் குண மடைந்து சென்றதாக கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தில் ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி மற்றும் ஸ்ரீ பதினாறு பிள்ளை காளி அம்மன் துணையுடன் அருள்வாக்கு மகன் எம்பிகே. சிவா பூசாரி ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் கருப்பசாமி அருள் வந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்லி வருகிறார். இவரது அருள் வாக்கு மூலம் ராமநாதபுரம் மாவட்டம் மட்டு மின்றி சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, நாகர்கோவில், சென்னை உட்பட பல்வேறு ஊர்களிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் பக்தர்கள் நுாற்று கணக் கானோர் இத் தினங்களில் வந்து தங்களது குறைகளுக்கு அருள்வாக்கு பூசாரி சிவா மூலம் தகுந்த அருள் பெற்று பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு செல்வதாக நம்பிக்கை கொண்டு தெரி விக்கின்றனர். குறிப்பாக தை, புரட்டாசி சித்திரை மாதங்களில் அருள் வாக்கு பெற வரும் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

 

சித்திரா பவுர்ணமி சிறப்பு அருள்வாக்கு:

சித்திரை மாதம் வந்த பவுர்ணமி சித்திரா பவுர்ணமி தினத்தில் காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கியது. அருள்வாக்கு மகன் சிவா பூசாரி யின் உடம்பில் கருப்பசாமி அருள் இறங்கி பக்தர்களை ஒவ் வொருத்தராக சிவா பூசாரி பெயரை கூறி அழைத்தார். அது மட்டு மின்றி பக்தர்கள் தான் என்ன பிரச்னைக்கு வந்தோம் என தெரிவிக்காமலேயே பூசாரி பக்தரிடம் நீ நீண்ட நாட்களாக இந்த பிரச்னையால் அவதிபட்டு வருகிறாய். நீ செல்லாத இடமில்லை. இப்போது கருப்பசாமியை நாடி வந்துள்ளாய். உன் பிரச்னை இன்றோடு முடிந்து விட்டது என அருள்வாக்கு கூறுவது அவரை நாடி வருபவர்களை வியப்பில் ஆழ்த்துவதாக கூறுகின்றனர். பின்பு அவர்களுக்கு விபூதி பூசி எலுமிச்சை பழத்தை பிரசாதமாக வழங்குகிறார். சில பக்தர்கள் தீராத நோயால் பாதிக்கப் பட்டு வந்ததை அறிந்த கருப்பசாமி பக்தர்களின் நோய் தீர்க்க அருள் வழங்கியதுடன் மட்டு மின்றி, எலுமிச்சை பழத்தை பிழிந்து எலுமிச்சை சாற்றை பக்தர்களை மூன்று முறை குடிக்க செய்கிறார். அதை பக்தர்கள் செய்தவுடன் நோயிலிருந்து குணமடைவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

சித்தரா பவுர்ணமி தினத்தில் அருள் பெற வந்த சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த சோபன்பாபு (35) சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றுகிறார்.

அவர் கருப்பசாமி அருள்வாக்கு பெற்ற பின் கூறியதாவது:

நான் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிகிறேன். ஒரு நாள் திடீரென மயங்கி விழுந்தேன். அப்போது என் குடும்பத்தினர் என்னை சென்னையில் உள்ள பிரபல மருத்துவனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு எனது மூளையில் ஒரு கட்டி உள்ளதாக கூறி சிகிச்சை அளித்தனர். அதன்பின் அடிக்கடி எனக்கு முதுகு தண்டு வடத்தில் வலி ஏற்படும். மயக்கம் வரும். நான் பல மருத்து வனைகளுக்கு சென்று பல பரிசோதனைகள் எடுத்தும் பல டாக்டர்கள் உடம்பில் ஒன்று மில்லையே என கை விரித்தனர். ஆனாலும் நான் வலியால் அவதிப் பட்டு வந்தேன். இந் நிலையில் தான் ராம நாத புரம் கொட்ட கையில் ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்ப சாமி அருள் வாக்கு மகன் சிவா பூசாரி அருள் வந்து அருளாசி வழங்கு வதை கேள்வி பட்டு இங்கு வந்தேன். பூசாரி என்னிடம் பேசிய போது மெய் சிலிர்த்தது. அவர் விபூதியை உடம்பில் பூசு என்றார். எலுமிச்சை பழம் சாற்றை குடிக்க சொன்னார். குடித்த மறு நிமிடம் உடம்பில் உள்ள வலி முழுவதும் மறைந்து விட்டது மிகவும் ஆச் சரிய மாக இருந்தது, என்றார்.

பின்பு அங்கு வந்த பக்தர்கள் அனை வருக்கும் எம்பிகே குருப்ஸ் அன்ன தான கமிட்டி சார்பில் அன்ன தானம் வழங்கப் பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here