காஞ்சிபுரம், டிச. 23 –
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்திய மருத்துவம் மற்றும் இந்திய ஹோமியோபதி துறை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 5 ஆம் ஆண்டு சித்தர் தின விழா நடைபெற்றது
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக உத்திரமேரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் மேலும் மருத்துவ மூலப்பொருள் கண்காட்சி மற்றும் மூலிகை கண்காட்சி வைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது
மகேப்பேறு சஞ்சீவி பெட்டகம் பெண்களுக்கு வழங்கப்பட்டது சித்த மருத்துவ தொடர்பாக பள்ளியிலௌ நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கோலப்போட்டியில் வெள்ளி பெற்றவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.





















