FILE COPY

செங்கம் பிப்.16-

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் உள்ளாட்சி தேர்தலையட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தி கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
  இந்த நிலையில் புதுப்பாளையம் பகுதியில் பேரூராட்சி தேர்தலையட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் தலைமையில்  100க்கும் மேற்பட்ட போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
  புதுப்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்தப் பேரணி புதுப்பாளையம் அனைத்து வார்டு  பகுதிகள் மற்றும் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களிலும் வழியாக  ஊர்வலமாக சென்று பொது மக்களின் அச்சத்தைப் போக்கினர். இந்த அணிவகுப்பில் செங்கம், மேல்செங்கம், புதுப்பாளையம், பாச்சல், சாத்தனூர் அணை, உள்ளிட்ட காவல் நிலைய காவலர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here