புதுடெல்லி:

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம் மீதான இந்திய விமானப்படை தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும், உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்து, பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று விடியோ கான்பரன்சிங் மூலம் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
எல்லையில் நடந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பரப்பும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். நமது இந்திய ராணுவத்தினர் மீது முழு நம்பிக்கை உள்ளது. இந்தியாவை பிரித்தாள பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு வருகின்றது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மலைபோல் உறுதியாக இருந்து எதிரிகளின் சூழ்ச்சிகளை வீழ்த்துவோம். ஒற்றுமையாக செயல்பட்டு , போரிட்டு வெற்றி காண்போம்.

நாட்டு மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கில் நாம் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். இதற்காக அனைத்து துறைகளும் திறம்பட செயல்பட வேண்டும். மேலும் இந்திய நாட்டை காப்பவர்களை எண்ணி இந்தியா பெருமை அடைந்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here