மாசிமகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை புனித காவிரி துலா கட்டத்தில் குவிந்த நூற்றுக்கணக்கானோர் : முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து இறை...
மயிலாடுதுறை, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை, தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது மாசி மாதம். மேலும் அம் மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்றும், முன்னோர்கள் சொல்வார்கள்.
மேலும் மாசி மாதத்தில்...
தென்குடி அங்காளிப்புரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் நடைப்பெற்ற காமேஸ்வர் காமேஸ்வரி திருக்கல்யாண...
நன்னிலம், மார்ச்.10
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள தென்குடி ஸ்ரீ அங்காளிபுரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீ காமேஸ்வர் மற்றும் காமேஸ்வரிக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் கடந்த ஒரு வாரகாலமாக மகா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது....
கொற்கை ஊராட்சி அருள்மிகு நாகலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கால பைரவர் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், டிச. 08 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கொற்கை ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர், ஆலய வளாகத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ காலவைரவர், ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொற்கை ஊராட்சியில் மிகப்பெரிய நாகமரம் அமைந்துள்ளது. அதன் கீழே...
காட்டூர் அருள்மிகு ஸ்ரீ கொங்கியம்மன் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் : திரளான சுற்று...
பொன்னேரி, ஜூன். 25 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காட்டூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கொங்கியம்மன், மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கும்பாபிஷேகத்திற்காக நான்கு கால யாகசாலை வேள்வியுடன் துவங்கிய விழாவில் விக்னேஸ்வர பூஜைகளும், மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும் நடைபெற்றது. பின்...
அருள்மிகு ஸ்ரீதிருநாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர பிரமோற்சவம் விழா …
கும்பகோணம், மார்ச். 26 -
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்றதும், மாசிமாத சிவராத்திரிநாளில் முதற்காலத்தில் ஆதிசேஷன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்றதாக இத்தல வரலாறு கூறப்படும் இச்சிறப்புமிக்க கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் உத்திர பிரமோற்சவம்...
திருநாகேஸ்வரம் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்…
கும்பகோணம், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள மேலத்தெருவில், எழுந்தருளியிருக்கும் செல்வ விநாயகர், ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து...
தஞ்சாவூர் வீதிகளில் வலம் வந்த ஏழூர் பல்லக்கு : வழிநெடுகிலும் நின்று வழிப்பட்ட திரளான மக்கள்..
தஞ்சாவூர், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு..
கரிகால்சோழன் வழிப்பட்ட தஞ்சை அருள்மிகு கருணாசாமி கோவில் வைகாசி விசாக பெருவிழாவை ஓட்டி ஏழூர் பல்லக்கு தஞ்சை வீதிகளில் வலம் வந்தன. வழிநெடுக நின்று மக்கள் வழிப்பட்டனர்
தஞ்சை கரந்தையில் அருள்மிகு. பெரியநாயகி அம்பாள் உடனுறை வஷி ஸ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது....
கீழக்கொட்டையூர் வாணியத்தெரு ஸ்ரீபாலமாரியம்மன் 112 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா : சக்திக்கரகம், பால்குடம் மற்றும் அலகுக்காவடி...
கும்பகோணம், மே. 03 -
கும்பகோணம் கீழகொட்டையூர் வாணியத் தெருவில் உள்ள பாலமாரியம்மன் திருக்கோவில் 112 ஆம் ஆண்டு சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டப் பக்தர்கள் சக்திக்கரகம் பால்குடம் அலகுக்காவடி எடுத்து வந்து விழாவில் பங்கேற்றனர்.
https://youtu.be/VSx8LTdFggA
இத்திருவிழா தொடர்ந்து கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாண்டு...
காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற மூன்றாம் நாள் உற்சவம் : தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சுவாமி...
காஞ்சிபுரம், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், அருள்மிகு ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் உற்சவமான இன்று தங்க கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அவ்விழாவினைக் காண அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/4CGzpYV5gIk
காஞ்சிபுரம்...
முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் ஆலய 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழா உற்சவம்… மலர்களால் அலங்காரிக்கப்பட்ட சப்பரத்தில் மூலஸ்தம்மன் எழுந்தருளி...
காஞ்சிபுரம், ஆக. 03 -
காஞ்சிபுரம் அருகே உள்ள முத்தியால்பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மூலஸ்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கூழ்வார்த்தல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
https://youtu.be/FNP3oU9-vLE
அதனைப் போன்று இந்தாண்டும் ஆடி மாதம் 3 வது ஞாயிற்று கிழமையன்று மூலஸ்தம்மன் திருக்கோவிலில்...


























