அமெரிக்க தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு-5 பேர் பரிதாப பலி
சிகாகோ:
அமெரிக்காவின் சிகாகோ அருகே அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
ஜனநாயக நாடான அமெரிக்காவில் குடிமக்கள் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்க அந்த நாட்டு அரசியல் சாசனம் அனுமதி அளித்து உள்ளது. இதனால் அங்கு...
சார்ஜா சென்ற இந்திய தம்பதி கார் விபத்தில் பரிதாப பலி
சார்ஜா:
இந்தியாவைச் சேர்ந்த வினோத்பாய் படேல்(47), ரோகிணிபேகன் வினோத்பாய் படேல்(42), சார்மி(13), மானவ்(9), யோகேஷ், மேக்னா, தீபக் படேல், வைஷாலி ஆகியோர் விடுமுறை நாட்களை கொண்டாட சார்ஜா வந்திருந்தனர். இவர்கள் குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த செவ்வாய்க்கிழமை சார்ஜாவில் அனைவரும் காரில் சுற்றுப்பயணம்...
ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் லண்டன் திரும்ப விருப்பம்
லண்டன்:
லண்டனில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷமீமா பேகம், கதிஜா சுல்தானா, அமைரா அபாஸ் ஆகிய மாணவிகள் வீட்டைவிட்டு வெளியேறினர். சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைய விரும்பிய அவர்கள், முதலில் துருக்கி சென்று அங்கிருந்து சிரியா சென்றுள்ளனர்.
அந்நாட்டில் ஆன்லைன் மூலம்...
சாண்ட்விச் திருடியதாக குற்றச்சாட்டு: பதவியை ராஜினாமா செய்த ஸ்லோவேனிய எம்பி
லியுப்லியானா:
ஸ்லோவேனியாவின் ஆளுங்கட்சியான எல்எம்எஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தரிஜ் கிரஜ்சிச் (வயது 54). இவர் சமீபத்தில் லியூப்லியானா நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு சாண்ட்விச் வாங்க சென்றுள்ளார். அப்போது சிறிது நேரத்தில் அங்கிருந்த சாண்ட்விச் ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.
அவர் சாண்ட்விச்சை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது....
ஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பரிதாப பலி?
ஹராரே :
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. இதில் தலைநகர் ஹராரேயில் இருந்து 145 கி.மீ. தொலைவில் உள்ள கடோமா நகருக்கு அருகே உள்ள 2 சுரங்கங்கள் நீண்ட காலமாக பயன்பாடின்றி கிடக்கின்றன.
இந்த சுரங்கங்களில் சமீபத்தில் சட்ட விரோதமாக நுழைந்த சிலர் தங்க...
கர்ப்பபையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள எஸ்ஸெக்ஸ் நகரை சேர்ந்தவர் பீதன் சிம்சன் (வயது 26). 5 மாத கர்ப்பிணி.
இவர் கடந்த மாதம் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதனையின்போது அவரது கர்ப்பபையில் இருந்த கருக்குழந்தை முதுகுத்தண்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த முதுகுத்தண்டு பிரச்சினையோடு...
ராணுவம் அதிரடி தாக்குதல்: 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
பாக்தாத்:
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவ வீரர்கள் தீவிர நடவடிக்கையில்...
அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம்-டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை
வாஷிங்டன்:
பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு விமான போக்குவரத்து...
“சூப்பர் ஜம்போ ஏ380” விமான தயாரிப்பை நிறுத்தப்போவதாக ஏர்பஸ் நிறுவனம் அறிவிப்பு
துலூஸ்:
ஐரோப்பாவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் ‘ஏர்பஸ்’. உலகிலேயே மிகப்பெரிய விமானமான ‘சூப்பர்ஜம்போ ஏ380’ ரக விமானங்களை இந்நிறுவனம் தயாரித்து வந்தது.
500 பயணிகள் அமரும் வண்ணம், 2 அடுக்குகளை கொண்ட ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளன.
இந்த நிலையில், ‘சூப்பர்ஜம்போ...
பிளாஸ்டிக் மாசுக்கு எதிராக களமிறங்கிய மலேசியா கிராம மக்கள்
கோலா லம்பூர்:
மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆகும். மேலும் பல நாடுகளில் இருந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவிற்கு வந்து குவிந்துள்ளன.
இவற்றை அகற்றும் முயற்சியில் ஜெஞ்ரோம் பகுதியைச் சேர்ந்த டேனியல் டாய், டன் சிங் ஹின் ஈடுபட்டுள்ளனர். மேலும்...

























