Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மாமல்லபுரத்தில் தொடங்கிய கட்டமைப்பு ஒருமைப்பாடு குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடு …

சென்னை, ஆக. 24 - கட்டமைப்பு ஒருமைப்பாடு குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடு ஆகஸ்ட் 23, 2023 அன்று மாமல்லபுரத்தில்  தொடங்கியது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமை இயக்குநரும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறையின் செயலாளருமான டாக்டர் என்.கலைச்செல்வி அதனைத் தொடங்கி வைத்தார். கல்பாக்கத்தில்...

பாதுகாப்பு தொடர்புடைய மையப்பொருள் அடிப்படையிலான திரைப்படங்களுக்கு தடையில்லா சான்றிதழ்கள் … பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட்

சென்னை, பிப். 12 - பாதுகாப்பு தொடர்புடைய மையப்பொருள் அடிப்படையிலான திரைப்படங்கள் தயாரிக்க தடையில்லா சான்றிதழ்கள் கோரி, திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து, 2021 ஜனவரி 1 முதல் 2022 ஜனவரி 31 வரை மொத்தம் 18 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  இவற்றில் 11 முழு நீள கதைப்படங்களுக்கானவை, 7 ஆவணப்படங்கள்...

விமான தாக்குதலில் முக்கிய பங்காற்றிய 2 கேரள வீரர்கள்

திருவனந்தபுரம்: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் நேற்று முன்தினம் பதிலடி கொடுத்தது. ராணுவத்தின் விமானப்படை வீரர்கள், பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தனர். சில மணி நேரங்களில் நடந்த இந்த தாக்குதலில்...

துணை ராணுவம் புதுவை வருகை

புதுச்சேரி: புதுவை கவர்னர் மாளிகை முன்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்து வரும் தர்ணா போராட்டத்தால் புதுவையில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி, சென்னை ஆவடி மற்றும் அரக்கோணம் பகுதியில் இருந்து 4 கம்பெனி துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் இன்று (வியாழக்கிழமை) காலை...

அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் அளிக்கும் திட்டம்-பிரதமர் தொடங்கி வைத்தார்

அகமதாபாத்: பாராளுமன்றத்தில் கடந்த மாதம் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது நாடு முழுவதும் உள்ள சுமார் 42 கோடி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ’பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி ஓய்வூதிய திட்டம்’ விரைவில் தொடங்கப்படும் என இடைக்கால நிதிமந்திரி பியுஷ் கோயல் குறிப்பிட்டிருந்தார். இந்த திட்டத்தின்கீழ்,...

உத்தராகண்டிலிருந்து துபாய்க்கு முதல் முறையாக காய்கறிகள் ஏற்றுமதி

உத்தராகண்டிலிருந்து துபாய்க்கு முதல் முறையாக நேற்று காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.  ஹரித்துவார் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட வெண்டைக்காய், பாகற்காய், பேரிக்காய், கருவேப்பிலை ஆகியவை துபாய்க்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது. உத்தராகண்ட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தினை வகைகள் கடந்த மே மாதம் டென்மார்க்குக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இங்கிருந்து வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விவசாயப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்(அபெடா) தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. 2020-21ம் ஆண்டில், இந்தியா ரூ.11,019 கோடிக்கு பழங்கள் மற்றும்  காய்கறிகளை ஏற்றுமதி செய்தது. அதற்கு முந்தைய ஆண்டில்  இது ரூ.10,114 கோடியாக இருந்தது. தற்போது காய்கறி பழங்கள் ஏற்றுமதி 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாசிக்கில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.100 கோடி வருவாய் கண்டுப்பிடிக்கப்பட்டது.

நாசிக்கில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நபருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 21ம் தேதி சோதனை நடத்தினர்.  இதில் நில ஒப்பந்தங்கள் உட்பட பல போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.  சொத்துக்கள் வாங்க மிகப் பெரிய அளவில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன....

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நாளை தேசிய பெண் குழந்தைகள் தினம் குறித்த ‘உமாங்’ என்னும் ரங்கோலி...

புதுதில்லி, ஜன. 23 - இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திர தினம், அதன் பெருமைமிகு மக்களின் வரலாறு, கலாச்சாரம், சாதனைகளைக் குறிக்கும் வகையிலான, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நாளை தேசிய பெண் குழந்தைகள் தினம் குறித்த ‘உமாங்’ என்னும் ரங்கோலி அலங்காரம் செய்யும் விழாவுக்கு கலாச்சார...

நடப்பு நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.65 சதவீதம்

புதுடெல்லி: இ.பி.எப். என்று அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, நடப்பு நிதி ஆண்டில் (2018-19) 8.65 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார், டெல்லியில் நேற்று வெளியிட்டார். இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, “நடப்பு நிதி ஆண்டில் தொழிலாளர்...

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு தலா ரூ.6000 உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஓராண்டில் தலா ரூ.2,000 வீதம் 3 தவணையாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் இதன்மூலம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS