Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கான நிதியுதவிகள் : மாநிலங்களவையில்அமைச்சர் நாராயண் ரானே தகவல் !

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளதாக இத்துறையின்  மத்திய அமைச்சர்  நாராயண் ரானே கூறியுள்ளார். அவர் மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: * குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) ரூ.20,000 கோடி மதிப்பில் துணை கடன். * எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் உட்பட தொழில்களுக்கு அவசரகால கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.4.5 லட்சம் கோடி உத்திரவாதம் இன்றி தானியங்கி கடன்கள். * எம்.எஸ்.எம்.இ. நிதி மூலம் Rs.50,000 கோடி பங்குத் தொகை உட் செலுத்துதல். * இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கிக்கு (SIDBI)  ரூ.15,000 கோடி  சிறப்பு மறு நிதியளிப்பு வசதி.  * சிறு நிதி நிறுவனங்கள் மூலம், 25 லட்சம் பேருக்கு கடன் உத்திரவாதத்துடன் கூடிய வசதி. * இந்த நிதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி சிறப்பு பணப் புழக்க திட்டம். * வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்களுக்கு  ரூ.90,000 கோடி கடன் உத்திரவாத திட்டம். கொரோனா பாதிப்பு காரணமாக, வரி செலுத்துவோர் சந்தித்த சவால்களை கருத்தில் கொண்டு,  குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உட்பட பல தொழில் நிறுவனங்களுக்கு வரி தொடர்பான பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.  * வரிச்சட்டங்களின் கீழ் பல இணக்கங்களுக்கு கால வரப்பு நீட்டிக்கப் பட்டது. * விவாத் சே விஸ்வாஷ் சட்டத்தின் நேரடி வரியின் கீழ் வரித்தாக்கலுக்கான தேதி நீட்டிப்பு. * பெருநிறுவன வரிகள் திருப்பி செலுத்தப்பட்டன. * வருமானவரி சட்டத்தின் கீழ் வரிப்பிடித்தம் கூறும் தகுதியான  தொடக்க நிறுவனங்களுக்கு இணைப்பு தேதி நீட்டிக்கப்பட்டது. * வருமானவரி சட்டத்தின் 6ஏ பி பிரிவின் கீழ் பலவிதமான  முதலீடுகளுக்கு வரிப்பிடித்தம் கோருவதற்கான  கடைசி தேதியும் நீட்டிக்கப்பட்டது.  * தாமதமாக செலுத்தப்படும் வரிகளுக்கு ஆண்டுக்கு 18 சதவீதம் என்ற வட்டிக்கு பதிலாக வட்டி தள்ளுபடி அளிக்கப்படுகிறது. காதி இயற்கை வண்ணப்பூச்சு தொடக்கம்: காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு, பசுஞ்சாணத்திலிருந்து, ஜெய்ப்பூரில் உள்ள குமரப்பா தேசிய கைவினை காகித   மையத்தால் (KNHPI) உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜெய்ப்பூரில் உள்ள காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் ஆலை. காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு சுற்றுச் சூழலுக்கு உகந்தது மற்றும் மலிவானது என குமாரப்ப காகித மையம்  நடத்திய ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காதி வண்ணப்பூச்சு, காசியாபாத்தில் உள்ள தேசிய பரிசோதனை  மையம், மும்பையில் மத்திய அரசின் தேசிய பரிசோதனை மையம்,  தில்லியில் உள்ள ஸ்ரீராம் தொழில் ஆராய்ச்சி மையம்  ஆகியவற்றில்   பரிசோதிக்கப்பட்டது. வண்ணப்பூச்சுக்கு தேவையான அளவுருக்களை இது நிறைவு செய்துள்ளது.  காதி வண்ணப்பூச்சுக்கு பசுஞ்சாணம் பயன்படுத்தப்படுவது, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும், கிராமங்களில் நிலையான வேலைவாய்ப்பை  உருவாக்கும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை பெற்று தரும்.

தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதி பற்றி பரபரப்பு தகவல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியதற்கு ஜெய்ஷ்- இ -முகமது பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் நடத்தியது ஆதில்அகமதுதர் என்பது தெரியவந்தது. அவனை பற்றிய பரபரப்பு தகவல் வருமாறு:- ஆதில் அகமதுதர் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் கண்டிபா பகுதியை சேர்ந்தவன். தாக்குதல் சம்பவம் நடந்த பகுதியில்...

கொவிட் – 19 சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது : மத்திய சுகாதாரத்துறை

சென்னை, நவ. 15 - தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 112.34 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,34,096 இது கடந்த 523 நாட்களில் அதாவது 17 மாதங்களில் இது மிகவும் குறைந்த அளவு என மத்திய சுகாதாரத்...

மைகவ் ஏழு வருடங்களை நிறைவு – தன்னார்வலர்கள் மற்றும் பங்காற்பாளர்களுக்கு பிரதமர் பாராட்டு

மைகவ் தளத்தை தங்களது பங்களிப்பு மூலம் மெருகேற்றிய அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் பங்காற்பாளர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். மைகவ் இந்தியாவின் டிவிட்டர் பதிவு ஒன்றுக்கு பதிலளித்த பிரதமர், “அனைவரும் பங்கு பெறும் ஆட்சி முறைக்கும், நமது இளைஞர் சக்திக்கு குரல் கொடுப்பதற்குமான சிறப்பான உதாரணமாக மைகவ் உயர்ந்து நிற்கிறது. #7YearsOfMyGov (மைகவ்-வின் ஏழு வருடங்களை) நாம் இன்று குறிக்கும் போது, மைகவ் தளத்தை தங்களது பங்களிப்பு மூலம் மெருகேற்றிய அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் பங்காற்பாளர்களை நான் பாராட்டுகிறேன்,” என்று தெரிவித்தார்.

சிப்ஸ் டு ஸ்டார்ட் அப் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது … மத்திய மின்னணு மற்றும் தகவல்...

டெல்லி, ஜன. 17 - சிப்ஸ் டு ஸ்டார்ட் அப்' திட்டத்திற்கு கல்வித்துறை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது இந்தியாவை அடுத்த செமிகண்டக்டர் மையமாக மாற்றுவதற்கான பிரதமர்...

தீவிர தேர்தல் பணியின் போது, புதுச்சேரியில் தேர்தல் அலுவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு …

புதுச்சேரி, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கு வாக்குபதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று வாக்குசாவடிகளுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பபட்டு வருகிறது. இதனிடையே அப்பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு...

காங்கிரஸ் எம்எல்ஏ உமேஷ் ஜாதவ் ராஜினாமா

பெங்களூரு : கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் மந்திரி பதவி கிடைக்காததால் நாகேந்திரா, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி ஆகியோரும், மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் ரமேஷ் ஜார்கிகோளியும் காங்கிரஸ் கட்சி மற்றும் அக்கட்சி தலைவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருந்து...

துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தி திருப்பதி கோவிலில் இலங்கை பிரதமர் வழிபாடு

திருமலா: இந்தியாவின் அண்டைநாடான இலங்கையின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்து செல்வது வழக்கம். அவ்வகையில், வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கொழும்புவில் இருந்து தனது மனைவி மைத்ரீ விக்ரமசிங்கேவுடன் நேற்று மாலை...

புதுச்சேரியில் தவறான சிகிச்சையால் 6 மாதமாக வெண்டி லேட்டரில் இருந்த ஒன்றரை வயது குழந்தை உயரிழப்பு : இந்திய...

புதுச்சேரி, பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …. புதுச்சேரி யூனியன் பிரதேசம், நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் தியாகு. மேலும் அவர் இந்திய ஜனநாயக கட்சி புதுச்சேரி மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இந்நிலையில் உடல் நிலை சரியில்லை என்பதற்காக அவரது ஒன்றறை வயது சாசிக்கா...

தொழில் அதிபர்களின் ரூ. 12 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய மோடி திட்டம்-ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் துராகானில் நடந்த பழங்குடியினர் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:- தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, விஜய் மல்லையா, மெகுல் சோக்ஷி, லலித்மோடி, நீரவ் மோடி போன்றோருக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் பணம் அளித்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 3.50...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS