Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெறவுள்ளது

இந்திய கடற்படையின் வருடாந்திர முக்கிய மாநாடான இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை அக்டோபர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. இந்திய-பசிபிக் பகுதியில் உருவாகும் வாய்ப்புகள் மற்றும் சவால்களை ஆய்வு செய்வதே இந்த வருடாந்திர கூட்டத்தின் நோக்கமாகும். “21-ம் நூற்றாண்டில் மாறிவரும் கடல்சார் யுக்தி: கட்டாயங்கள், சவால்கள் மற்றும் எதிர்வரும் பாதை”...

புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் காவல் நிலைய அதிகாரிகளின் தொலைப்பேசி எண் தாங்கிய பதாகைகள் ..

புதுச்சேரி, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி நகர பகுதிகளில் கஞ்சா விற்பனை, பொது இடங்களில் மது அருந்துபவர்கள் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காவல் துறையினரை தொடர்பு கொள்ளும் விதமாக நிலைய அதிகாரிகள் எண்கள் பொருத்திய வேண்டுகோள் பதாகைகளை பெரிய கடை...

குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கான நிதியுதவிகள் : மாநிலங்களவையில்அமைச்சர் நாராயண் ரானே தகவல் !

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளதாக இத்துறையின்  மத்திய அமைச்சர்  நாராயண் ரானே கூறியுள்ளார். அவர் மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: * குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) ரூ.20,000 கோடி மதிப்பில் துணை கடன். * எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் உட்பட தொழில்களுக்கு அவசரகால கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.4.5 லட்சம் கோடி உத்திரவாதம் இன்றி தானியங்கி கடன்கள். * எம்.எஸ்.எம்.இ. நிதி மூலம் Rs.50,000 கோடி பங்குத் தொகை உட் செலுத்துதல். * இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கிக்கு (SIDBI)  ரூ.15,000 கோடி  சிறப்பு மறு நிதியளிப்பு வசதி.  * சிறு நிதி நிறுவனங்கள் மூலம், 25 லட்சம் பேருக்கு கடன் உத்திரவாதத்துடன் கூடிய வசதி. * இந்த நிதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி சிறப்பு பணப் புழக்க திட்டம். * வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்களுக்கு  ரூ.90,000 கோடி கடன் உத்திரவாத திட்டம். கொரோனா பாதிப்பு காரணமாக, வரி செலுத்துவோர் சந்தித்த சவால்களை கருத்தில் கொண்டு,  குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உட்பட பல தொழில் நிறுவனங்களுக்கு வரி தொடர்பான பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.  * வரிச்சட்டங்களின் கீழ் பல இணக்கங்களுக்கு கால வரப்பு நீட்டிக்கப் பட்டது. * விவாத் சே விஸ்வாஷ் சட்டத்தின் நேரடி வரியின் கீழ் வரித்தாக்கலுக்கான தேதி நீட்டிப்பு. * பெருநிறுவன வரிகள் திருப்பி செலுத்தப்பட்டன. * வருமானவரி சட்டத்தின் கீழ் வரிப்பிடித்தம் கூறும் தகுதியான  தொடக்க நிறுவனங்களுக்கு இணைப்பு தேதி நீட்டிக்கப்பட்டது. * வருமானவரி சட்டத்தின் 6ஏ பி பிரிவின் கீழ் பலவிதமான  முதலீடுகளுக்கு வரிப்பிடித்தம் கோருவதற்கான  கடைசி தேதியும் நீட்டிக்கப்பட்டது.  * தாமதமாக செலுத்தப்படும் வரிகளுக்கு ஆண்டுக்கு 18 சதவீதம் என்ற வட்டிக்கு பதிலாக வட்டி தள்ளுபடி அளிக்கப்படுகிறது. காதி இயற்கை வண்ணப்பூச்சு தொடக்கம்: காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு, பசுஞ்சாணத்திலிருந்து, ஜெய்ப்பூரில் உள்ள குமரப்பா தேசிய கைவினை காகித   மையத்தால் (KNHPI) உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜெய்ப்பூரில் உள்ள காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் ஆலை. காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு சுற்றுச் சூழலுக்கு உகந்தது மற்றும் மலிவானது என குமாரப்ப காகித மையம்  நடத்திய ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காதி வண்ணப்பூச்சு, காசியாபாத்தில் உள்ள தேசிய பரிசோதனை  மையம், மும்பையில் மத்திய அரசின் தேசிய பரிசோதனை மையம்,  தில்லியில் உள்ள ஸ்ரீராம் தொழில் ஆராய்ச்சி மையம்  ஆகியவற்றில்   பரிசோதிக்கப்பட்டது. வண்ணப்பூச்சுக்கு தேவையான அளவுருக்களை இது நிறைவு செய்துள்ளது.  காதி வண்ணப்பூச்சுக்கு பசுஞ்சாணம் பயன்படுத்தப்படுவது, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும், கிராமங்களில் நிலையான வேலைவாய்ப்பை  உருவாக்கும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை பெற்று தரும்.

விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து விபத்து : விமானி காயம்

மத்திய பிரதேசத்தில் விமானப்படையின் பயிற்சி விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் விமானப்படையின் பயிற்சி விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதில் பாராசூட் மூலம் விமானி தப்பினார்.

போக்சோ நீதிமன்றத்தில் முத்தியால் பேட்டை சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 500 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த...

புதுச்சேரி, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி படுகொலை வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர் புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ந் தேதி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும்...

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு தலா ரூ.6000 உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஓராண்டில் தலா ரூ.2,000 வீதம் 3 தவணையாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் இதன்மூலம்...

டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாவுடன் லாலு கட்சி எம்.எல்.ஏ. கைது

புதுடெல்லி: பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. சந்திரசேகர். டெல்லியில் தங்கி இருந்த இவர் இன்று காலை விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையம் சென்றார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினார்கள். எம்.எல்.ஏ. வைத்திருந்த பையில் 10 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. அதை வைத்திருப்பதற்கு...

தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2021: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழங்கினார்.

டெல்லி, ஜன. 16 - தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2021-ஐ, 46 தொடக்க நிறுவனங்கள் வென்றன. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசியதாவது: ஸ்டார்அப் திட்டம், தற்சார்பு மற்றும் தன்னம்பிக்கை இந்தியாவின் அடையாளம். சென்னையைச் சேர்ந்த மீனவரின்...

புதுவைக் கடற்கரையில் பலூன் வியாபரியின் 4 வயது பெண் குழந்தை திடீரென மாயம் : காவல்துறையினர் தீவிர விசாரணை...

புதுவை, பிப். 15 - தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத் ... புதுவை லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துபாண்டி (வயது 26). இவரது மனைவி விஜயலட்சுமி. இருவரும் புதுவை கடற்கரை சாலையில் பலூன், பொம்மை போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். https://youtu.be/joBWry-9sM0 இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று...

பிரதமர் பதவி மீது ஆசையா? – மத்திய மந்திரி கட்காரி பதில்

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி பிரதமர் பதவிக்கு வரக்கூடும் என ஊக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுபற்றி அவரிடம் செய்தி நிறுவனம் ஒன்று கேள்வி எழுப்பியது. அப்போது அவர், ‘‘நான் எந்த கணக்கும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS